*தந்த நாகஸ்வரம்*
இந்த தந்த நாகஸ்வரம் திருவாருர் தியாகராஜர் ஆலயத்தில் இசை பணி செய்து வந்த நயினாரடியார் வம்சத்தினர் சுமார் 1000 ஆண்டுகள் பாதுகாத்து வந்த மிக அரிய பொக்கிஷமாகும்.தஞ்சை மாமன்னன் இராசஇராச சோழன் திருவாரூர் ஆலயத்திற்கு வந்ததாகவும் பல கொடைகள் அளித்ததாகவும் கல்வெட்டுக்களில் செய்திகள் தெரிவிக்கின்றன. ஒரு சமயம் அவ்வாறு வந்த போது திருவாரூர் ஆலயத்தில் இசைத்த பாரி நாகஸ்வர இசையினை கேட்டு வெகுவாக மகிழ்ந்த மன்னன் பிறகு தனது பரிவாரங்களுடன் தஞ்சை அரண்மனைக்கு திரும்பினார்.அது சமயம் தஞ்சை தரணியில் மழை யின்றி வறட்சி தோன்றியது மன்னனுக்கு யோசனை திருவாரூர் ஆலயத்தில் அற்புதமாக இசைமழை பொழிந்த நயினாரடியார்களை அழைத்து இசைக்க செய்தால் இயற்கை மழையினை அருளலாம் என்று அவ்வாறே அவர்களை அழைத்து பாரி நாகஸ்வரத்தை இசைக்க செய்தார்.உடனே மழை பொழிந்து தஞ்சை செழித்தது எனவும். அதற்காக அளித்த பரிசே இந்த தந்த நாகஸ்வரம் என செய்திகள் தெரிவிக்கின்றன. திருவாரூர் உலக புகழ் பெற்ற ஆழி தேரின் போது நடைபெறும் 'அகால சாயரட்சை'யின் போது இந்த அரிய தந்த நாகஸ்வர இசைக்கருவி இசைக்கப்பட்டு வந்துள்ளது. இதை இசைப்பது எளிதான காரியமல்ல பொதுவாக நாகஸ்வரம் இசைப்பது என்பது கடினமான காரியம் தந்தத்திலான நாகஸ்வரம் இசைக்கும் பொழுது அதிலிருந்து திரும்ப எழும்பும் காற்று அதிக உஷ்ணத்தை உண்டாக்கும் என்பதால் இதை இசைக்கும் முன் ஒரு சொம்பு நெய் அருந்திவிட்டு இந்த நாகஸ்வரத்தை இசைத்துள்ளனர். காற்று அதிகமாக கொடுத்து இசைக்கும் வகையில் காணப்படுகிறது.
ஆதாரம் -நயினாரடியார்கள் வைத்து உள்ள பழமையான ஏட்டு சுவடி
இந்த தந்த நாகஸ்வரம் திருவாருர் தியாகராஜர் ஆலயத்தில் இசை பணி செய்து வந்த நயினாரடியார் வம்சத்தினர் சுமார் 1000 ஆண்டுகள் பாதுகாத்து வந்த மிக அரிய பொக்கிஷமாகும்.தஞ்சை மாமன்னன் இராசஇராச சோழன் திருவாரூர் ஆலயத்திற்கு வந்ததாகவும் பல கொடைகள் அளித்ததாகவும் கல்வெட்டுக்களில் செய்திகள் தெரிவிக்கின்றன. ஒரு சமயம் அவ்வாறு வந்த போது திருவாரூர் ஆலயத்தில் இசைத்த பாரி நாகஸ்வர இசையினை கேட்டு வெகுவாக மகிழ்ந்த மன்னன் பிறகு தனது பரிவாரங்களுடன் தஞ்சை அரண்மனைக்கு திரும்பினார்.அது சமயம் தஞ்சை தரணியில் மழை யின்றி வறட்சி தோன்றியது மன்னனுக்கு யோசனை திருவாரூர் ஆலயத்தில் அற்புதமாக இசைமழை பொழிந்த நயினாரடியார்களை அழைத்து இசைக்க செய்தால் இயற்கை மழையினை அருளலாம் என்று அவ்வாறே அவர்களை அழைத்து பாரி நாகஸ்வரத்தை இசைக்க செய்தார்.உடனே மழை பொழிந்து தஞ்சை செழித்தது எனவும். அதற்காக அளித்த பரிசே இந்த தந்த நாகஸ்வரம் என செய்திகள் தெரிவிக்கின்றன. திருவாரூர் உலக புகழ் பெற்ற ஆழி தேரின் போது நடைபெறும் 'அகால சாயரட்சை'யின் போது இந்த அரிய தந்த நாகஸ்வர இசைக்கருவி இசைக்கப்பட்டு வந்துள்ளது. இதை இசைப்பது எளிதான காரியமல்ல பொதுவாக நாகஸ்வரம் இசைப்பது என்பது கடினமான காரியம் தந்தத்திலான நாகஸ்வரம் இசைக்கும் பொழுது அதிலிருந்து திரும்ப எழும்பும் காற்று அதிக உஷ்ணத்தை உண்டாக்கும் என்பதால் இதை இசைக்கும் முன் ஒரு சொம்பு நெய் அருந்திவிட்டு இந்த நாகஸ்வரத்தை இசைத்துள்ளனர். காற்று அதிகமாக கொடுத்து இசைக்கும் வகையில் காணப்படுகிறது.
ஆதாரம் -நயினாரடியார்கள் வைத்து உள்ள பழமையான ஏட்டு சுவடி
No comments:
Post a Comment