Friday, August 7, 2015

108 கரணங்கள்-108 Karanas

 சாரி, ஸ்தானகம், ஹஸ்தங்கள், முதலியவற்றுடன் இணைந்த அபிநயம் கரணம் எனப்படும்.  கர+அண்+அம் = கரணம். கரணத்தால் செய்யப்படும் செய்கைகள் என்று பொருள் கூறப்படுகிறது. பரதநாட்டியத்தில் இது ஒரு கூறு.  "ஹஸ்த பாத ஸம்யோகோ கரணம் பவேத்' கை கால்களின் ஒருங்கிணைந்த இசைவு "கரணம்' ஆகும். என்றாலும் இதனோடு உடல் நிலையும் சேரவேண்டும். அசைவின் ஓர் உரைநிலைத் தருணம் . உண்மையில் இது ஒரு முழு இயக்கம்தான். கரணங்கள் நீண்ட பயிற்சியின் அடிப்படையில் உடலை வருத்திச் செய்யக் கூடிய ஒன்றாகும். இவ்வகையில் அமையும் கரணங்கள் 108 ஆகும்.உடல் உறுப்புகளால் செய்யும் செய்கை கரணம் என்று அழைக்கப்படுகின்றது.
*சிற்பக்கலையில் கரணங்கள்*
ஆலயங்களில் பல நடன சிற்பங்கள் காணப்பட்டாலும் சில ஆலயங்களில் மட்டும் தான் ஆடல் இலக்கணங்களில் ஒன்றான 108 கரண சிற்பங்கள் முழுவதும் இடம் பெற்றுள்ளன. தஞ்சாவூர் பெரிய கோவில், சிதம்பரம் நடராஜர் கோயில்,கும்பகோணம் சாரங்கபாணிக் கோயில், திருவதிகை திருத்தலம் ஆகியவை 108 கரணங்களையும் சுமந்து இன்றும் சிறப்பாக காட்சி தருகின்றன.
தஞ்சை பெரியகோயிலின் கருவறையைச் சுற்றி 11 அடி கனத்துக்கு ஒரு சுற்றுச்சுவர் உள்ளது அதையடுத்து ஓர் உள்சுற்று அறை காணப்படுகிறது. இதனை "சாந்தாரம்' என்கிறார்கள். இச்சாந்தாரத்தின் வெளிப்புறச்சுவர் 13 அடி கனம் கொண்டது. இந்த உள்சுற்று அறையான சாந்தாரத்தின் அகலம் 6 அடி. இந்த அறையில்தான் சிறப்பு மிக்க சோழர் கால ஓவியங்கள் உள்ளன. மேலுள்ள முதல் தளத்தில்தான் இக்கரணங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் தலையை உயர்த்தாமல் சம மட்டத்திலிருந்து பார்க்கும் வண்ணம் இவை வரிசையாக அமைந்திருக்கின்றன. இத்தளத்தில் கரண சிற்பங்கள் இருப்பது வெளி உலகுக்கு இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை தெரியாமலே இருந்தது. 1954 ஆம் ஆண்டில் தொல்லியல் துறை அலுவலர் கே. ஆர். ஸ்ரீனிவாசன் என்பவரே இதனை முதலில் கண்டுபிடித்தார்.
கரணங்கள் 2 அடி உயரக் கல்லில் புடைப்பாக செதுக்கப்பட்டிருக்கின்றன. 108 கரணங்களுள் முதல் 81 கரணங்களே செதுக்கப்பட்டிருக்கின்றன. ஏனைய கரணங்களுக்கான கற்கல் தயார் நிலையில் இருக்கின்றன. என்ன காரணத்தாலோ இவை முழுமைப்படுத்தப்படவில்லை. வெளியிலிருந்து கல்லில் செதுக்கி எடுத்து வந்து ஒட்டாமல், முதலிலேயே சுவற்றில் கருங் கற்களை பதித்து விட்டு பின்பு சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
சிவபெருமான் நான்கு கரங்களுடன் இவற்றை ஆடிக் காட்டுவதாக இவை அமைக்கப் பட்டுள்ளன. சிவகணங்கள் கருவிகளை இசைத்துக் கொண்டோ பார்த்துக் கொண்டோ அருகில் இருக்கின்றன. தலபுட்பபுடம் என்னும் முதல் கரணம் முதல் சர்ப்பிதம் என்னும் 81 வது கரணம் வரை இவை உள்ளன. இங்குள்ள வரிசை முறையே பரத முனி நாட்டிய சாத்திரத்திலும் காணப்படுகிறது.

கும்பகோணம் சாரங்கபாணிக் கோயில் சிற்பங்கள் வேறு இடத்தில் இருந்து கொண்டுவந்து இங்கு பதிக்கப்பட்டவை என்றும் கூறப்படுவதால், இச் சிற்பங்கள்  பிற் காலத்தைச் சேர்ந்தவை என கருதப்படுகிறது.

தில்லை கோவிலில், 'பரதம் வல்லான்' என்று போற்றப்பட்ட  காடவ குல மன்னன் கோப்பெருஞ்சிங்கனால், 108 கரணங்கள் உரிய குறிப்புகளுடன் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. ஆடல் வல்லான்கோயில் கோபுரத்தில் இந்த 108 கரணங்கள் ஒரு பெண் ஆடும் நிலையில் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

திருவதிகை ஆலயத்திலும்  இது போல் 108 கரணங்கள் கோபுரவாயிலில் செதுக்கப்பட்டுள்ளன.இவ்வாலயத்திலும் ஒரு பெண் ஆடும் நிலையில் தான் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
*நாட்டிய சாத்திரத்தில் கூறப்பட்டுள்ள வரிசையின்படி 108 கரணங்கள்*
1.தல புஷ்ப புடம்
2.வர்த்திகம்
3.வலி தோரும்
4.அபவித்தம்
5.ஸமநகம்
6.லீநம்
7.ஸ்வஸ்திக ரேசிதம்
8.மண்டல ஸ்வதிகம்
9.நிகுட்டகம்
10.அர்த்த நிகுட்டம்
11.கடிசின்னம்
12.அர்த்த ரேசிதம்
13.வக்ஷஸ்வஸ்திகம்
14.உன்மத்தம்
15.ஸ்வஸ்திகம்
16.பிருஷ்ட ஸ்வஸ்திகம்
17.திக்ஸ்வஸ்திகம்
18.அலாதம்
19.கடீஸமம்
20.ஆக்ஷிப்த ரேசிதம்
21.விக்ஷிப்த ஆக்ஷிப்தகம்
22.அர்த்த ஸ்வதிகம்
23.அஞ்சிதம்
24.புஜங்க திராஸிதம்
25.ஊர்த்வஜாநு
26.நிகுஞ்சிதம்
27.மத்தல்லி
28.அர்த்த மத்தல்லி
29.ரேசகநிகுட்டம்
30.பாதாபவித்தகம்
31.வலிதம்
32.கூர்ணிதம்
33.லலிதம்
34.தண்ட பக்ஷம்
35.புஜங்க திரஸ்த ரேசிதம்
36.நூபுரம்
37.வைசாகரேசிதம்
38.பிரமரம்
39.சதுரம்
40.புஜங்காஞ்சிதம்
41.தண்டக ரேசிதம்
42.விருச்சிக குட்டநம்
43.கடிபிராந்தம்
44.லதா விருச்சிகம்
45.சின்னம்
46.விருச்சிக ரேசிதம்
47.விருச்சிகம்
48.வியம்சிதம்
49.பார்ச்வநிகுட்டகம்
50.லாலடதிலகம்
51.கிராந்தம்
52.குஞ்சிதம்
53.சக்ரமண்டலம்
54.உரோமண்டலம்
55.ஆக்ஷிப்தம்
56.தலவிலாஸிதம்
57.அர்க்களம்
58.விக்ஷிப்தம்
59.ஆவ்ருத்தம்
60.தோலபாதகம்
61.விவிருத்தம்
62.விநிவிருத்தம்
63.பார்ச்வக்ராந்தம்
64.நிசும்பிதம்
65.வித்யுத்பிராந்தம்
66.அதிகிராந்தம்
67.விவர்திகம்
68.கஜகிரீடிதகம்
69.தலஸம்ஸ்போடிதம்
70.கருடபுலுதகம்
71.கண்டஸுசீ
72.பரிவிருத்தம்
73.பார்ச்வ ஜாநு
74.கிருத்ராவலீனகம்
75.ஸந்நதம்
76.ஸுசி
77.அர்த்தஸுசி
78.ஸுசிவித்தம்
79.அபகிராந்தம்
80.மயூரலலிதம்
81.ஸர்பிதம்
82.தண்டபாதம்
83.ஹரிணப்லுதம்
84.பிரேங்கோலிதம்
85.நிதம்பம்
86.ஸ்கலிதம்
87.கரிஹஸ்தம்
88.பிரஸர்ப்பிதகம்
89.ஸிம்ஹவிக்ரீடிதம்
90.ஸிம்ஹாகர்ஷிதம்
91.உத்விருத்தம்
92.உபஸ்ருதம்
93.தலஸங்கட்டிதகம்
94.ஜநிதம்
95.அவஹித்தகம்
96.நிவேசம்
97.ஏலகாக்ரீடம்
98.ஊரூத்விருத்தம்
99.மதஸ்கலிதகம்
100.விஷ்ணுக்கிராந்தம்
101.ஸம்பிராந்தம்
102.விஷ்கம்பம்
103.உத்கட்டிதம்
104.விருஷபக்ரீடிதம்
105.லோலிதம்
106.நாகாபஸர்ப்பிதம்
107.சகடாஸ்யம்
108.கங்காவதரணம் 


No comments:

Post a Comment