Sunday, September 20, 2015

பஞ்ச வாவாத்தியம்

பஞ்ச வாவாத்தியம்
"இறைவனின் சொந்தம் நாடு" என அறியப்படும் கேரளம் என்கிற சேர நாடு, தாய் தமிழகத்தை போலவே பல கலைகளுக்கு பிறப்பிடம் என்ற மிக முக்கிய அந்தஸ்தும், அக்கலைகளை ரசிக்கவும் அதன் வளர்ச்சிக்காக பாடுபடவும் மனமுள்ள மக்களை கொண்டது என்பதும் வரலாற்று உண்மை. இத்தகு கலை ரசிகர்களை கொண்டதாலோ என்னவோ, கேரளம் தமிழ் நாட்டை போலவே கலைகளின் குவியலாக திகழ்கிறது.

பொதுவாக கேரள கலைகளில் குறிப்பிடும்படியாக அறுபத்து நான்கு கலைகளை “திருவிதாங்கூர் அரண்மனை” ஏடுகளில் காண முடிகிறது. இவை வரிசை கிரமமாக இல்லை என்றாலும், ஏறக்குறைய அவற்றின் காலக்கிரமத்திற்க்கு ஏற்றவாறு உள்ளதாக வரலாற்று மேதைகள் கூறுகின்றனர். அக்கலைகள் கீழ் வருமாறு:

1.       அர்ஜுன ந்ருத்தம்
2.       ஆதி வேடன் கலி
3.       சாக்கியார் கூத்து
4.       நங்கியர் கூத்து (நங்கையர் கூத்து)
5.       ஷோபான சங்கீதம்
6.       ஒப்பன
7.       கரடி ஆட்டம்
8.       கம்பாடி கலி
9.       ஐவர் கலி
10.    கண்யார் கலி (கன்னியர் கலி)
11.    காக்கரிஷி கலி
12.    காளியூட்டு
13.    குருமார் கலி
14.    களமெழுத்து
15.    கூடியாட்டம்
16.    கும்மாட்டி கலி
17.    கொத்தாமுரியாட்டம்
18.    புல்லுவன் பாட்டு
19.    கருடன் தூக்கம்
20.    சவிட்டு கலி
21.    சாத்தான் கலி
22.    சோழி கலி
23.    மோஹினி ஆட்டம்
24.    தாளம் கலி
25.    திடம்பு ந்ருத்தம்
26.    திருவாதிர கலி
27.    தீயாட்டு கலி
28.    களரிப்பயட்டு
29.    துள்ளல்
30.    தெய்யம்
31.    தெய்யன்னம்
32.    தோல் பாவக்கூட்டு
33.    தவ்வு முட்டு
34.    புளிக்கலி
35.    நாகச்சுட்டு
36.    நாயக்கர் கலி
37.    படையணி
38.    பள்ளு கலி
39.    பாணியர் கலி
40.    பரிச்சமுட்டு கலி
41.    கூரன் கலி
42.    பதிச்சி கலி
43.    பாக்கனார் கலி
44.    பானக்கலி
45.    பூதம் கலி
46.    பூதனும்திரையும்
47.    பூரம் கலி
48.    பஞ்ச வாத்தியம்
49.    பத்ரகாளி துள்ளல்
50.    யக்ஷ கானா
51.    கூடியாட்டம்
52.    மலையிக்கூட்டு
53.    மங்களம் கலி
54.    கேரள நடனம்
55.    மார்க்கம் கலி
56.    முடியேட்டு
57.    முடியாட்டம்
58.    வடி தல்லு
59.    வட்ட கலி
60.    வில்லடிச்சான் பாட்டு
61.    வேடன் துள்ளல்
62.    வேள கலி
63.    சர்ப்பம் துள்ளல்
64.    பூதன் திர

மேற்கண்ட கலைகள் வெவ்வேறு நிகழ்ச்சிகளின் சூழலுக்கேற்ப நிகழ்த்தப்படுகிறது. இவற்றில் வாத்திய கலையில் “பஞ்ச வாத்தியம்” மிக முக்கிய இடம் வகிக்கிறது.

கேரளா, தமிழ் நாடு, ஆந்திரா, கர்நாடகா, மும்பையின் செம்பூர், டும்பிவில்லி, டெல்லி, குஜராத் போன்ற இடங்களில் உள்ள கிருஷ்ணன், சிவன், ஐயப்பன், தேவி ஆலயங்களில் முக்கியமாக கார்த்திகை, மார்கழி காலங்களில் இந்த வாத்தியம் முக்கிய இடம் பெறுகிறது. நாமும் கேட்டிருப்போம், ரசித்திருப்போம். பஞ்ச வாத்தியம் குறித்த சில விஷயங்கள் இதோ.

பஞ்ச வாத்தியத்தின் தோற்றம் குறித்து சரியான குறிப்புகள் இல்லை என்றாலும், இந்த கலை பன்னெடுங்காலமாக பல ஆலயங்களை அலங்கரித்து மனங்களை கொள்ளை கொண்டு வருகிறது. பஞ்ச வாத்தியம் கடந்த 80 வருடங்களுக்கும் மேலாக ஆலயங்களை அலங்கரித்து வருகிறது. இன்றைய அளவில் இசைக்கப்படும் பஞ்ச வாத்தியத்தின் அடித்தளம் 1930 காலக்கட்டத்தில் மறு சீரமைக்கப்பட்டது. இந்த இசையின் ஜாம்பவான்களாகிய திருவில்லா மலை வெங்கடேஸ்வர ஐயர் மற்றும் அவரது சீடர் மாதவ வாரியர் மற்றும் குழுவினர் முயற்சியால் பதிகாலம் முதல் ஐந்தாம் காலம் வரை உள்ள தாள கட்டுக்கள் வரையறுக்கப்பட்டு மறு சீரமைக்கப்பட்டு புழக்கத்தில் வந்தது.

இரண்டு மணி நேரம் வரை நீளும் இந்த இசையின் இனிமைக்கு இதன் இசை கருவிகள் மிக முக்கியம் ஆகின்றன. மற்ற செம்பட மேளங்களை போல பஞ்ச வாத்தியத்திலும் இசை கலைஞர்கள் அரை பிறை வடிவில் நின்று இசைக்கின்றனர்.

மற்ற செம்பட மேளங்கள் குறை வேக தாள கட்டுகளில் தொடங்கி வேக தாள கட்டைகளை எட்டுவது போல் அல்லாமல் சங்க நாதம் மூன்று முறை முழங்கியதுமே வேக தாள கட்டைகளை அடைகிறது பஞ்ச வாத்தியம்.

பெயருக்கு ஏற்றதுபோல் பஞ்ச வாத்தியம் ஐந்து இசை கருவிகளுடன் இசைக்கப்படுகிறது. “திமில” “மத்தளம்” “இலத்தாலம்” “இடக்க” மற்றும் “கொம்பு” ஆகியவை பஞ்ச வாத்தியத்தின் இசை கருவிகள் ஆகும். இவ்வைந்தில் முதல் நான்கும் தாள வாத்திய குடும்பத்தையும், கொம்பு காற்றிசை குடும்பத்தையும் சார்ந்தது. மற்ற எல்லா செம்பட மேளங்களை போலவே பஞ்ச வாத்தியத்தின் தாள கட்டைகள் பிரமிட் அமைப்பில் வேகம் கூடி கொண்டே செல்லும் வகையில் அமைந்துள்ளது.

பஞ்ச வாத்திய குழுவின் நடுவில் நிற்கும் “திமில” இசை கலைஞர், இலதாளத்தின் உதவியோடு இந்த இசையை வழி நடத்தி செல்கிறார். அவர்களுக்கு எதிரில், மத்தளம் இசைப்பவர்களின் வரிசையும், அவர்களுக்கு பின்னால் கொம்பு இசைப்பவர்களும் அணி வகுக்கிறார்கள். “இடக்க” இசை கலைஞர்கள் பொதுவாக இருவராகவும், இரு பக்கமும் திமிலை மற்றும் மத்தளத்துக்கு நடுவில் நின்று இசைக்கின்றனர். “சங்கு” மூல மற்றும் மங்கள இசையாக நிற்கிறது. “திமிலை” பஞ்ச வாத்தியத்தின் “பிரமான” வாத்தியம் ஆகும். இதில் இசை கலைஞர்களின் எண்ணிக்கை 12 முதல் 54 அல்லது 55 என நிகழ்ச்சி, நேரம், மற்றும் சூழலுக்கேற்ப இருக்கும்.

ஒவ்வொரு மத்தளமும் இரண்டு திமிலைகளாலும், ஒவ்வொரு திமிலைக்கும் சமமான எண்ணிக்கையில் கொம்பும், இலத்தாலமும் இருக்கும். ஒரு “இடக்க” கண்டிப்பாக இருக்கும். பெரிய குழுவில் இடக்க எண்ணிக்கை இரண்டோ அல்லது மூன்றோ
பஞ்ச வாத்தியத்தின் தொடக்கத்தின் அடையாளமாக “சங்க நாதம்” முழங்கப்படும். இது ஒரு மங்கள நிகழ்வின் தொடக்கம் என அருகில் உள்ளவருக்கும், ஊராருக்கும் அறிவிப்பதாகும். சங்க நாதம் இரு முறை “ஓம்” என ஒலித்து மூன்றாவது முறை ஒலிப்பதற்கான கால அட்டவணையில் முக்கால் பங்கு கடக்கையில் கொம்பு தவிர ஏனைய “மத்தளம், திமில, இடக்க, இலத்தாலம்,” ஆகியவை ஒரு சேர “ஓம்” எனும் ஒளியை எழுப்பும். இதன் பொருள் எல்லாவற்றிற்கும் துவக்கம் “ஓம்” எனவும் “ஓம்” மங்களத்தின் அடையாளம் எனவும் ஆகும்.

மேலே சொன்னது போல் பஞ்ச வாத்தியத்தின் தாள கட்டமைப்பு பிரமிட் வடிவத்தில் 10 காலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.  முதல் காலம் 896 அக்ஷர காலங்களில் தொடங்கி, 10வது காலத்தில் 1 ¾ அக்ஷர காலத்தில் நிறைவுறுகிறது. இந்த பத்து காலங்களும் மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.

1, 2 மற்றும் 3  காலங்கள் மெதுவாக, நிதானமான தாள கட்டமைப்பை உடையது. இது “பதி களம்” அல்லது “பதி காலம்” என்று கூறப்படும்.

4, 5 மற்றும் 6 காலங்கள் மத்திய தாள கட்டமைப்பை உடையது. இது “மத்ய களம்” அல்லது “மத்ய காலம்” என்று கூறப்படும்.

7, 8, 9 மற்றும் 10 காலங்கள் உச்ச பட்ச தாள கட்டமைப்பை உடையது. இது “திருத களம்” அல்லது “திருத காலம்” என்று கூறப்படும். "திஸ்ர" என்றும் கூறப்படுவதுண்டு.

“பதி களம்” முடிய பதினைந்து நிமிடங்கள் வரை பிடிக்கும். நிகழ்ச்சியின் மொத்த நேரத்தை கணக்கிட்டு “பிரமாணி” என்பவர் “பதி களம்” இசைக்கப்படும்போது மொத்த நிகழ்ச்சியின் போக்கை தீர்மானிப்பார்.

நீண்ட தாளங்கள் முதல் அல்லது இரண்டாம் காலத்திலும் குறுகிய தாளங்கள் மூன்றாம் மற்றும் நான்காம் காலத்திலும் தொடங்கும். இந்த காலங்கள் “அடந்த” எனும் தாளத்தில் அமைந்தது என்றாலும் “செம்பட” தாளத்தின் ஆதிக்கம் கடைசி சில தாளங்கள் வரை இருக்கத்தான் செய்கிறது. நிதான கதியில் தொடங்கி துரித கதியை அடையும் இந்த இசை “த்ரிபுட” என்ற தாளத்தை இறுக்கமாக பற்றி கொண்டு இறுதியில் பேரொலி நிலையிலிருந்து இறங்கி ரம்மியமாக நிறைவுறுகிறது.

பஞ்ச வாத்தியத்தின் இறுதியில் “திமில” கருவிகள் எல்லாம் சேர்ந்து “திமில எடச்சில்” எனும் அருமையான “செம்பட” தாளத்தில் அமைந்த தாள கட்டையை “இளத்தாலம்” உதவியுடன் “வேகம்” “ஒலி” “திறமை” என்ற கூட்டு கலவையாக வழங்குவது அருமையான ஒரு அனுபவம்.

கேரள மாநிலத்தில் நடைப்பெறும் திருவிழாக்களில் முக்கியமானதான திருச்சூர் பூரம், உத்ராளிக்காவு பூரம், நம்மார வல்லங்கி வேல, சினக்காத்தூர் பூரம், மன்னார்க்காடு பூரம், திருமாந்தான்குன்னு காவு பூரம், அடூர் கஜமேலா, பெருவனம் பூரம், திருஅனந்தபுரம் பைங்குனி (பங்குனி) உத்சவம், வைக்கத்து அஷ்டமி, குருவாயூர் ஏகாதசி போன்ற விழாக்களில் இந்த இசை துறையை சேர்ந்த பல ஜாம்பவான்கள் இசைப்பதை தாங்கள் இறைவனுக்கு செய்யும் இசை காணிக்கையாக கருதுகின்றனர்.

சபரி மலையில் நடைபெறும் கொடியேட்டு, உல்சவம், பைங்குனி (பங்குனி) உத்திரம், பிரதிஷ்டா தினம், நிரபுத்தரி ஆகிய விசேஷங்களில் வாத்திய கலைகளில்  முக்கியமாக கருதப்படும் செம்பட மேளம், பஞ்ச வைத்தியம், செண்டை, தாயம்பக, பாஞ்சாரி, சிங்காரி என பல வகை வாத்தியங்கள் இசைக்கப்படும். இவைகளில் பஞ்ச வாத்தியம், தாயம்பக, ஷோபான சங்கீதம் ஆகியவை முக்கிய இடத்தை பெறுகிறது. பல வருடங்களுக்கு முன் (இப்போது உள்ளதா என்று தெரியவில்லை) சபரி மலை சன்னிதானத்தின் முன் ஷோபான சங்கீதம் இசைப்பவர்கள், நெஞ்சுருகி, கண்ணீர் மல்க பாடும் அந்த சூழல் நெஞ்சுக்கு நெருக்கமானது.




பஞ்ச வாத்தியம் நம் நெஞ்சை நிறைக்கட்டும்.

நன்றி
Soman K

அம்புஜம் கிருஷ்ணா

அம்புஜம் கிருஷ்ணா

இசை மேம்பாட்டிற்காகப் பாடுபட்டவர்களில் பெண்களின் பங்களிப்பு நிறைவாக அன்று முதல் இன்று வரை நிலவி வருகிறது. இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய பெண் கலைஞர்களில் சிலர் சிறந்த இயலிசைப் புலவர்களாகவும், சிறந்த குரலிசை மற்றும் கருவி இசைக் கலைஞர்களாகவும் விளங்கினர். இவர்களில் சிறந்த இயலிசைப் புலவராக அம்புஜம் கிருஷ்ணா விளங்குகிறார். இவர் இசைப்பாக்கள் பலவற்றைப் படைத்து இசையுலகிற்கும், நாட்டிய உலகிற்கும் பெரும் பங்காற்றியுள்ளார்.

அம்புஜம் கிருஷ்ணா

பிறப்பும், கல்வியும் :

அம்புஜம் கிருஷ்ணா அவர்கள் இரங்க அய்யங்காருக்கும் செல்லம்மாளுக்கும் மகளாக 1917ஆம் ஆண்டு மே 21 ஆம் நாளில் திருவனந்தபுரத்தில் பிறந்தார். இவருடன் உடன் பிறந்தவர்கள் இரு சகோதரர்கள், இரு சகோதரிகள் இருந்தனர். சிறுவயதிலேயே தம் தாயாரை இவர்கள் இழந்தனர். அம்புஜம் கிருஷ்ணா இசையின் மீது கொண்ட ஈடுபாட்டின் காரணமாக இவரின் பெற்றோர்கள் தம் மகளுக்கு இசை கற்பிக்க நினைத்தனர். அதனால், இசை மேதைகள் அரியக்குடி இராமானுச அய்யங்காரின் சீடர் காரைக்குடி கணேசனிடமும், ஜி.என்.பாலசுப்பிரமணியத்தின் சீடர் கணேச பாகவதரிடமும் இசையைக் கற்றார். பின்பு இவர் மனையியல் (Home Science) பட்டத்தை டில்லியில் உள்ள இர்வின் கல்லூரி மூலம் பெற்றார். தமது 17 வது வயதில் தந்தையையும் இழந்தார். தமது பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்தார்.

திருமணம் :

அம்புஜம் கிருஷ்ணா டி.வி.எஸ்.நிறுவனர் சுந்தரம் இலட்சுமி அம்மாளின் மகனான கிருஷ்ணாவை மணம் புரிந்தார். இவர்களுக்கு மூன்று புதல்வர்களும், ஒரு பெண்ணும் பிறந்தனர். மிகவும் மென்மைக்குணமுடையராகவும் விளங்கினார்.

இவர் எண்ணை ஓவியம் (Oil Painting), தையல், தோட்டப் பராமரிப்பில் ஈடுபாடு கொண்டவர்.

முதல் பாடல் :

அம்புஜம் கிருஷ்ணா சிறுவயதிலேயே பாடல்கள் இயற்றும் திறம்படைத்தவராக விளங்கினார். இவரின் திறமை வெளியுலகத்தாருக்குத் தெரியாமல் இருந்தது. 1951 ஆம் ஆண்டு திருவையாற்றில் உள்ள தியாகராசர் சமாதிக்கு வருகை தந்தார். தியாகராசர் மீது பக்திக் கொண்டார். “பானம் செய்யவாரீர்” என்ற பாடலைத் தியாகராசர் மீது இயற்றினார். இதுவே இவரின் முதற் பாடலாகக் கூறப்படுகின்றது. அன்று முதல் பாடல்களைப் படைத்து வந்தார். இவர் மதுரை மீனாட்சி அம்மன் மீது இயற்றிய “உன்னையல்லால்” என்ற கீர்த்தனையும், உடுப்பி கிருஷ்ணன் மீது “கோலங்கொண்டு” போன்ற பாடலையும் படைத்தார்.

பாடற்பொருள் :

அம்புஜம் கிருஷ்ணாவின் பாடல்களில் புராணக் கருத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இவரது பாடல்களில் இராமாயணம், மகாபாரதம், கிருஷ்ணன், சிவனின் கதைகள், கஜேந்திர கோட்சக் கதைகளும், புராண இதிகாசங்களில் காணப்படும் செய்திகளும் நிறைந்து காணப்படுகின்றன.

இவரது பாடல்கள் எளிமையாகவும், மனத்தை நெகிழவைக்கும் திறம் படைத்ததாகவும், கருத்துச் செறிவு மிக்கதாகவும் காணப்படுகின்றன. இயல் வளமும், இசைத் திறனும் பெற்றப் பாடல்களாக இவை உள்ளன.

இசை நாட்டிய உருக்கள் :

அம்புஜம் கிருஷ்ணா இசை நாட்டிய உருக்கள் பலவற்றை இயற்றியுள்ளார். வர்ணம், பதவர்ணம், கிருதி, இராகமாலிகை, பதம் ஆகிய வடிவங்களில் உருக்கள் பலவற்றை இயற்றியுள்ளார். இவற்றில் பதவர்ணம், பதம் ஆகியவை நாட்டிய அரங்குகளில் இன்றும் ஆடப்பட்டு வருகின்றன. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், சமசுகிருதம், இந்தி, மணிப்பிரவாள மொழிகளில் பாடல்களைப் படைத்துள்ளார். மணிப்பிரவாளம் என்பது ஒரே பாடலில் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட மொழிகள் இணைந்து காணப்படுவதாகும். இவர் “அம்புஜாக்ஷா” என்ற தம் பெயரையே (சுவநாம முத்திரை) முத்திரையாகப் பயன்படுத்தியுள்ளார்.

இவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியுள்ளதாகவும், அறுநூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியுள்ளதாகவும் இருவேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. இதில் தமிழ் மொழியில் 172 பாடல்களையும், தெலுங்கில் 20 பாடல்களையும், இந்தியில் 60 பாடல்களையும், கன்னடத்தில் 1 பாடல்களையும், மணிப்பிரவாளத்தில் 2 பாடல்களையும் படைத்துள்ளார்.

மேலும், இவர் கண்ணன் மீது 14 இராகமாலிகைகளையும், சிவன் முருகன் மீது ஒரு இராகமாலிகையும், நாட்டியத்திற்குரிய 6 பதங்களையும் இயற்றியுள்ளார்.

இவர் இசை நாடகம், கும்மி, ஊஞ்சல், கிளிக்கண்ணி, தாலாட்டு போன்ற வகைகளையும் திருமாலின் பத்து அவதாரங்களைக் கூறும் மங்கலத்தையும் இயற்றியுள்ளார். இந்தப் பாடல்களின் ஒவ்வொரு அடியின் இறுதியும் மங்கலம் என்ற சொல் இடம்பெறும்.

நாட்டியத்திற்காக கிருஷ்ணலீலா மாதுர்யம், இராதாமாதவம் என்ற இரு நாட்டிய நாடகங்களையும் இயற்றியுள்ளார்.

இசையமைப்பு :

அம்புஜம் கிருஷ்ணா பாடலை மட்டும் இயற்றியுள்ளார். இசையமைப்புப் பணியைச் செய்யவிலை. இப்பாடல்கள் இவரது காலத்திலேயே இசைக் கலைஞர்களால் இசையமைக்கப்பட்டன. நூல் வடிவில் வெளியிடப் பெற்றுள்ளன. இவை குறுந்தகடுகளிலும் வெளிவந்துள்ளன. இவரது பாடல்களுக்குச் செம்மங்குடி சீனிவாச ஐயர், வி.வி.சடகோபன், எஸ்.இராமநாதன், கே.சி.தியாகராசன், சாத்தூர் ஏ.ஜி.சுப்பிரமணியம், கே.ஆர்.கேதாரநாதன், மதுரை டி.என்.சேஷகோபாலன், மதுரை கிருஷ்ணன், அனந்தலட்சுமி சடகோபன், ஆர்.வேதவல்லி, சாருமதி இராமச்சந்திரன், முரளி கிருஷ்ணன் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.

கீதமாலா தொகுதிகள் :

அம்புஜம் கிருஷ்ணா இயற்றிய பாடல்கள் “கீதமாலா” என்ற பெயரில் நூல் வடிவில் வெளிவந்துள்ளன. இவர் இயற்றிய பாடல்களில் 231 பாடல்கள் ஐந்து தொகுதிகளாக வெளியிடப்பெற்றுள்ளன.

கீதமாலாவின் முதற்தொகுதியை வி.வி.சடகோபனும், இரண்டாம் தொகுதியை எஸ்.இராமநாதனும், மூன்றாம் தொகுதியை என்.இராமநாதனும், மதுரை டி.என்.சேஷகோபாலனும், நான்காம் தொகுதியை கே.என்.கேதாரநாதனும், ஐந்தாம் தொகுதியை அனந்தலட்சுமி சடகோபனும் இசையமைத்துள்ளனர்.

இவரது “இராதமாதவம்” என்னும் நாட்டிய நாடகம் ஆறாவது தொகுதியாக வெளிவந்துள்ளது. இவர் பாடல்கள் நூல் வடிவில் வெளிவர இவரது மாமியார் இலட்சுமி சுந்தரம் காரணமாக இருந்தார். இப்பாடல்களை அம்புஜம் கிருஷ்ணாவின் நெருங்கிய தோழி அனந்தலட்சுமி சடகோபன் அவர்கள் 48 ஆண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்தார்.

இவரது பாடல்களை இசைக் கலைஞர்கள் குறுந்தகடு வடிவில் பாடி வெளியிட்டுள்ளனர். ஆர்.வேதவல்லி அவர்கள் அம்புஜம் கிருஷ்ணாவின் நினைவு நாளில் இவரது பாடல்களைக் கொண்ட இசை நிகழ்ச்சியை வழங்கினர். இதனை இராஜலட்சுமி பைன் ஆர்ட்ஸ் “அம்புஜ கீதம்” என்ற தலைப்பில் குறுந்தகடு வடிவில் வெளியிட்டுள்ளது.

சத்குரு சங்கீத சமாஜம் :

அம்புஜம் கிருஷ்ணா அவர்கள் மதுரையில் சத்குரு சங்கீத சமாஜம் என்ற இசைக் கல்லூரியை நிறுவினர். இக்கல்லூரியில் முதலில் மாலை நேர இசை வகுப்புகளே நடைபெற்றன. பின்னர் இசையில் இளங்கலை, முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர்பட்ட வகுப்புகள் தொடங்கப்பட்டன. இசை நாட்டியக் கலைகளை வளர்க்கும் சிறந்த நிறுவனமாகச் செயல்பட்டு வருகின்றது. மேலும், தன்னை இசையுலகிற்கு அறிமுகப்படுத்திய தம் மாமியாரின் பெயரில் “லட்சுமி சுந்தரம் கலையரங்கை” இங்கு அமைத்துள்ளார். இவ்வரங்கில் சிறந்த இசை நிகழ்ச்சிகளை வழங்கிட ஏற்பாடு செய்தார். இன்றும் இவ்வரங்கில் புகழ்பெற்ற இசைக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

சிறந்த இசைப்பாக்களைத் தந்து இசை, நாட்டிய உலகிற்கு அளித்த அம்புஜம் கிருஷ்ணா அவர்கள் 1989 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் நாள் இறைவனடி சேர்ந்தார்.

அம்புஜம் கிருஷ்ணாவின் சில புகழ்பெற்ற பாடல்கள் :
1. அழகா அழகா   -சுத்த தன்யாசி   -கண்டசாபு
2. கண்ணாவா   -இராகமாலிகை   -ஆதி
3. ஓம்நமோ நாராயணா   -கருணாரஞ்சனி   -கண்டசாபு
4. ஓடோடி வந்தேன் கண்ணா   -தர்மவதி   -ஆதி
5. குருவாயூரப்பனே   -ரீதிகௌளை   -ஆதி
இசை உலகம் பெற்ற அரிய மங்கையராக அம்புஜம் கிருஷ்ணா விளங்கினார். இசைப்பாக்கள் இயற்றி இசை உலகிற்குத் தொண்டாற்றியுள்ளார். மிகச்சிறந்த இசை விற்பனர்களால் இசையமைக்கப் பெற்ற இப்பாடல்கள் பலரால் பயிலப்பட்டும் பலரால் பாடப்பட்டும் வருகின்றன.


நன்றி
முனைவர் செ.கற்பகம்
உதவிப் பேராசிரியர்
இசைத்துறை

தமிழ்நாட்டு ஆலய வழிபாட்டில் இசைக் கருவிகள்


தமிழ்நாட்டு ஆலய வழிபாட்டில் இசைக் கருவிகள்


     உலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிரின் குறிக்கோளும் இறைவனைச் சென்றடைவது தான் என்று ஆன்மீகவாதிகள் கருதினார்கள். அவனருளாலே அவன் தாள் பற்றுவதுதான் இறைவனைச் சென்றடையும் வழி என்றும் போதித்தார்கள்.
இறைவனிடம் பக்தி செலுத்தினால் உய்வடையலாம் என்று கொள்கை வகுத்தவர்கள், பக்தி ஒன்பது வகையில் செய்ய முடியும் என்ற னர். அவை ‘நவவித பக்தி’ என்று அழைக்கப் பட்டன. அவற்றுள் இறைவன் புகழைப்பாடும் ‘கீர்த்தனம்’ என்பதும் ஒன்று. இசை வழியே இறைவனைக் கண்டவர்கள் நம் முன்னோர்.
இசை,  மிடற்றிசை என்றும் கருவி இசை என்று இருவகைப்படும். மனிதனது குரல்கூட ஒரு இசைக்கருவிதான். அதை காத்திர வீணை என்றனர். குரலிசைக்குத் துணையாகக் கருவிகள் இசைக்கப்பட்டன. தனியாகவும் கருவிகள் இசைக்கப்பட்டன.
கடவுள் கொள்கையில் ஊறிய நம் முன்னோர் தம்மிடமுள்ள சிறந்தவற்றை யெல்லாம் இறைவனுக்கு அர்ப்பணித்தனர். பிரமிக்கத்தக்க வானுயர்ந்த கோபுரங்களுடன் கோவில்கள் எடுப்பிக்கப்பட்டன. பொன்னும், மணியும், பட்டும் கொண்டு இறை மூர்த்தங் களை அலங்கரித்தனர். நித்திய, பட்ச, மாத சம்வத்சர உற்சவங்களை நடத்தினர். ஆடல், பாடல் போன்ற நிகழ் கலைகளையும் அவனுக்கு அர்ப்பணித்து மகிழ்ந்தனர்.
கடவுளர் இசைக்கருவிகளோடு இணைத்து நினைக்கப்படுகின்றனர். சிவ பெருமானும் கையில் தமருகம் காணப்படுகிறது. பார்வதி வீணையுடன் காணப்படும்பொழுது மாதங்கி என்றும் திருமகள் வீணையுடன் காணப்படும் பொழுது வீணா இலக்குமி என்றும் அழைக்கப் படுகிறார்கள். கையில் வீணையுடன் உள்ள தென்முகக் கடவுளுக்கு வீணாதர தட்சிணா மூர்த்தி என்பது பெயர். கண்ணன் குழல் இசைப்பவன். நந்தி மத்தளம் கொட்ட இறைவன் ஆடுகிறான். அப்போது தாளம் போடுகிற பணி நான்முகனைச் சேர்கிறது.
வாராகி, காளி ஆகியோர் கரங்களில் சங்கும், ரௌத்திரி கரத்தில் தக்கையும் காணப்படு கின்றன.
தேவ இருடிகளும் இசைக்கருவிகளைக் கையாள்பவர்களாக வருணிக்கப்படுகிறார்கள். தும்புரு, நாரதர் இருவரும் வீணை வாசிப் பவர்கள். நாரதர் கையிலுள்ள வீணைக்கு மகதி என்று பெயர். கின்னர மிதுனங்கள், கின்னரம் என்னும் கருவியை இசைக்கின்றன.
திருவாலங்காட்டில் சிவபெருமான் ஆடுகின்றான். இனிமையாகப் பாடிக்கொண்டு, இசைக்கருவிகளை இசைத்துக் கொண்டு அப்பன் ஆடுகின்றான். திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் இதை வருணிக்கிறது.
துத்தங்கைக் கிளை விளரி தாரம்
உழை இளிஓசைபண் கெழுமப் பாடிச்
சச்சரி கொக்கரை தக்கை யோடு
தகுணிதம் துந்துபி தாளம் வீணை
மத்தளம் கரடிகை வன்கை மென்றோல்
தமருகம் குடமுழா மொந்தை வாசித்(து)
அத்தனை விரவினோடாடும் எங்கள்
அப்பன் இடம் திருவாலங் காடே.
சேரமான் பெருமாள் நாயனாரின் திருக்கைலாய ஞான உலாவில் இறைவன் புறப்பாட்டிற்கு வாசிக்கப்படும் இசைக்கருவிகள் கூறப்படுகின்றன.
சல்லரி தாளம் தகுணிதம் தத்தளகம்44  
கல்லலகு கல்ல வடமொந்தை - நல்லியத்
தட்டழி சங்கம் சலஞ்சலந் தண்ணுமை45
கட்டிழியாப் பேரி கரதாளம் - கொட்டும்
குடமுழவம் கொக்கரை வீணை குழல்யாழ் 46
இடமாம் தடாரி படகம் _ இடவிய

மத்தளம் துந்துபி வாய்ந்த முரு(டு) இவற்றால் 47
எத்திசை தோறும் எழுந்தியம்ப _ ஒத்துடனே
மங்கலம் பாடுவோர் வந்திறைஞ்ச  4
இறை வழிபாட்டில் இசையும், இசைக் கருவிகளும் பயன்படுத்தப்பட்டமை சங்க இலக்கியம், காப்பிய இலக்கியம், பக்தி இலக்கியம், உரையாசிரியர் தன் குறிப்புகள், கல்வெட்டுக்கள், பழங்காலச் சிற்பங்கள், ஓவியங்கள் வாயிலாகத் தெரியவருகிறது.
யாழ், பதலை, முழவு, தூம்பு ஆகிய கருவிகளுடன் கடவுளைப் போற்றி வழிபட்டனர் என்ற செய்தியைப் பதிற்றுப்பத்து தெரிவிக்கிறது.
புணர்புரி நரம்பின் தீந்தொடை பழுனிய
வணரமை நல்யா ழிளையர் பொறுப்பப்
பண்ணமை முழவும் பதலையும் பிறவும்
கண்ணறுத் தியற்றிய தூம்பொடு சுருக்கிக்
காவிற்றகைத்த துறைகூடு கலப்பையர்
கைவ லிளையர் கடவுட் பழிச்சி
(பதிற்றுப்பத்து: 41: 1_6)
கோயில் வழிபாட்டு முறைகளில் இசைக்கருவிகள் பேரிடம் பெற்றிருந்தன. இராசராசன் காலத்தில் கோவில்களில் இசைக் கருவிகள் வாசிப்பவர்கள் நியமிக்கப்பட்ட செய்தியை ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது:
“ஸ்ரீ ராசராசேச்சுரம் உடையார்க்குத் திருப்பதிகம்
விண்ணப்பம் செய்ய உடையார் நடராச தேவர்
கொடுத்த பிடாரர்கள் நாற்பத் தெண்மரும்
இவர்களிலே நிலையாய் உடுக்கை வாசிப்பான்
ஒருவனும் இவர்களிலே நிலையாய்க் கொட்டி
மத்தளம் வாசிப்பான் ஒருவனும் ஆக ஐம்பதின்
மருக்குப் பேரால் நிசதம் நெல்லு முக்குறுணி
நிவந்தமாய் ராசகேசரியோ டொக்கும்
ஆடவல்லான் என்னும் மரக்காலால் உடையார்
உள்ளுர்ப் பண்டாரத்தில் பெறவும்’’
தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கு ஆடற்கலையில் வல்ல நானூறு பெண்களையும், அவர்களை ஆட்டுவிக்கும் நட்டுவர்களையும், பாடுபவர்களான கானபாடிகள், கந்தர்வர்,
ஆரியம் பாடுவோர், தமிழ் பாடுவோர், முகவீணை, உடுக்கை, வீணை, கொட்டி மத்தளம், முத்திரைச் சங்கு, பக்க இசைக் கருவிகள், மேளம் ஆகிய கருவிகளை வாசிப்பவர்களையும் இராசராசன் நியமித்திருக்கிறான். இச்செய்தியினையும் இவர்கள் அத்துணை பேரின் பெயர்களையும் இராசராசனுடைய கல்வெட்டு தெரிவிக்கிறது.
1.இவ்வாறு பல கல்வெட்டுக்கள் கலைஞர்களை ஆதரித்த செய்திகளைத் தருகின்றன.
கோயில்களில் பயன்படுத்தப்பட்ட பல கருவிகள் இன்று பெயர் மட்டுமே தெரிகின்றனவாக உள்ளன. இவை எப்படி இருக்கும் என்று தெரியவில்லை, சிற்பங்களிலும், ஓவியங்களிலும் காணப்படுகின்ற பல கருவிகளை அவை என்ன என்று கண்டுபிடிக்க இயலவில்லை. ஒரு காலத்தில் இவை சாதாரணமாகப் புழக்கத்தில் இருந்திருக்க வேண்டும்.
சான்றாக, கும்பகோணம் நாகேசுவர சுவாமி கோயிலிலுள்ள செப்பேடு ஒன்றினைச் சுட்டலாம். துக்கோசி காலத்துச் செப்பேடு அது. அதன் நாள்: 5 - 4 - 1734. நாகபாசத்தார் (கலைஞர்கள்) எல்லோருமாகச் சேர்ந்து ஓர் அறக்கட்டளை வைத்திருக்கிறார்கள். இச்செப்பேட்டின் பின்புறம் புடைப்புச் சிற்பமாக நாற்பதிற்கும் மேற்பட்ட இசைக்கருவிகள் காணப்படுகின்றன. 2.(ஆபிரகாம்  பண்டிதர், கர்ணாமிர்த சாகரம் முதல் புத்தகம், பக்.15 - 173) அவற்றுள் பல கருவிகள் என்னவென்றே தெரியவில்லை. மூன்று நூற்றாண்டுகளுக்குள் இவ்வளவு மாற்றம் என்றால்; தேவார காலத்தில் கூறப்பட்டுள்ள பல கருவிகள் மறைந்து போய் விட்டதில் வியப்பில்லை. இன்னும் சங்க காலத்துக் கருவிகளைக் குறித்து எண்ணிப் பார்க்கவே முடியவில்லை. இழப்பதில் நாம் வல்லவர்கள்.
திருக்கோயில்களில் அர்த்த மண்டபம், மகாமண்டபம் போன்ற பல வகையான மண்டபங்கள் இடம்பெறுகின்றன. இவற்றுள் வாத்திய மண்டபம், வீணா மண்டபம், நிருத்த மண்டபம் ஆகியனவும் அடங்கும். கோவில்களில் கலைகளுக்குக் கொடுக்கப்பட்ட சிறப்பிடத்தை இதன் வாயிலாகத் தெரிந்து கொள்ள முடிகிறது. இதில் வாத்தியசாலை அமைக்கவேண்டிய இடம் குறித்த மரபும் உண்டு. இரண்டாம் பிரகாரத்தில் கிழக்கு திசைக்கும் வடகிழக்கு திசைக்கும் நடுவில் வாத்திய சாலை அமைக்கப்படுகிறது.
குடமுழுக்கு சடங்குகளில் ஒன்றான வாஸ்து சாந்தியில் நடைபெறும் வாத்திய பூஜையில் ஆடற் கலைகளும், இசைக் கருவிகள் இசைக்கும் கலைஞர்களும் ரட்சாபந்தனம் செய்து கொள்ள வேண்டும்.
திருக்கோயில்களின் தளவாட அறிக்கை களைத்தேடிப் பார்த்தால் அக்கோயில்களில் இருந்த இசைக் கருவிகளின் பட்டியல்கள் கிடைக்கின்றன. சான்றாக, அரங்கநாதர் ஸ்ரீரங்கம் கோவிலில் 1953ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இசைத்திருந்த கருவிகள்:
பெரிய மேளம் - 1
மேளம் (தவில், தாளம், ஒத்து,
நாயனம் 4 உருப்படிகள்)   - 3 ஜதை
    அதிக நாயனம்-1
    கவுரி காளை-2
    திருச்சின்னம்-1
    எக்காளை-1
    வீரவண்டி-1
    சேமக்கலம்-1
    சங்கு-1
    மங்கள வாத்தியம்-1
    நட்டு, முட்டு-2
    சுத்து மத்தளம்-1
    கொக்கை (உடுக்கை)-1
    பெரிய கைத்தாளம்-1
     பாரி-1
சிவன் கோவில்களில் பிரமோற்சவம் முடிந்து கொடி இறங்கிய பிறகு கோவிலைச் சுற்றி ஏழுமுறை வலம் வரும் சப்தப்பிரதட்சணம் என்ற சடங்கு நடைபெறும். அடியார்கள் சூழ இறைமூர்த்தங்கள் வலம் வரும்போது, ஒவ்வொரு திருவலத்திற்கும் அது எவ்வாறு வர வேண்டும் என்ற முறை உண்டு. இதில் இசைக்குச் சிறப்பிடம் தரப்பட்டுள்ளது. இறுதி இரு சுற்றுக்களில் கருவி இடம்பெறுகிறது. திருவையாறு அருள்மிகு ஐயாறப்பர் திருக்கோயிலில் சப்தப்பிரதட்சண சடங்கின் முறை:
    முதல் வலம்             -          மௌனம்
    இரண்டாவது வலம்   -          கட்டியம்
    மூன்றாவது வலம்     -          வேதம்
    நான்காவது வலம்      -          தேவாரம்
    ஐந்தாவது வலம்        -           இசை
    ஆறாவது வலம்         -           நட்டுமுட்டு
    ஏழாவது வலம்          -            நாதசுரம்
    “அஷ்டாதச வாத்தியங்கள்’’ என்று பதினெட்டுக் கருவிகள் இறைவழிபாட்டில் இடம் பெற்றிருந்தன. அப்பதினெட்டுக் கருவிகளின் பட்டியலை சீதாவிவாக சூர்ணிகை தருகிறது:
    “பேரி ம்ருதங்க மத்தள காகள துந்துபி துரீய தும்புரு வீணா வேணு நூபுர மட்டுக டிண்டிம டமருக ஜஞ்சரி ஜல்லரி தவள சங்க பணவ படக அஷ்டாதச வாத்யகோஷ’’
‘திருவாரூர் தியாராஜ பெருமாள் ஆலயத்திற்கு 18 இசைக்கருவிகள் உண்டு. அவை:
சர்வ வாத்தியம்
1. பாரி நாதசுரம்
2. பஞ்சமுக வாத்தியம்
3. கொடுகொட்டி
4. சுத்த மத்தளம்
5. நாட்டு தாளம்
6. ஜல்லரி (பெரிய தாளம்)
7. எக்காளம்
8. வாங்கா
9. கர்ணா
10. துத்தி
11. சங்கம்
12. சேமக்கலம்
13. டக்கா
14. பேரிகை
16. தவண்டை
17. புல்லாங்குழல்
18. திருச்சின்னம்.
செய்யூர் கோவிலில் சர்வ வாத்தியம் நிகழ்த்தப்படுகிறது. சர்வ வாத்தியம் என்றால் எல்லாக் கருவிகளும் என்று பொருள். கோயி லில் மிடற்றிசை, கருவியிசை ஆகிய அனைத்தையும் கடவுளுக்குப் படைத்து வழிபடுவதே சர்வ வாத்தியமாகும். இது நானூறு ஆண்டு களாக இக்கோயிலில் நிகழ்த்தப்படுகின்றது.
பேரா. சாம்பமூர்த்தி, செய்யூர் செங்கல்வராய சாத்திரி அவர்களின் உருப்படிகளையும் சுந்தரேச விலாசத்தையும் பதிப்பித்துள்ளார். அந்நூலில் சர்வவாத்தியம் குறித்தும் அது நிகழ்த்தப்பட வேண்டிய முறை குறித்தும் விவரித்துள்ளார்.
சர்வவாத்தியம் காமிக ஆகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஷோடச உபசாரம் முடிந்த பிறகு சர்வ வாத்யம் தொடங்குகிறது. தொடர்புடைய அவதாரிகை வாக்கியத்தை சிவாச்சாரியார் ஓதிய பிறகு ஒவ்வொன்றாக நிகழ்த்தப்படும்.
சர்வ வாத்திய முறை
மிருதங்கம், பிரம்மதாளம், நட்டுவ தாளம், சேமக்கலம், மணி, கண்டாமணி ஆகியன ஒலிக்க தீபாராதனை; ஆசீர்வாதம் (சிவாச்சாரியார்); கட்டியம் (ஓதுவார்); பிறகு சர்வவாத்யம் தொடங்குகிறது:
1. பிரம்ம தாளம், குழித்தாளம் துணையுடன் நட்டுவனார் ஜதியும், பாடலும் இசைக்கிறார்.
2. நந்திகேசுவர வாத்தியம் (சுத்தமத்தளம் அல்லது மிருதங்கம்)
3. இராகம் (ஒரு இராகத்தின் ஆலாபனை)
4. புஷ்பாஞ்சலி
5. சுத்த மத்தளம்
6. நாட்டியம் (கோவில் ஆடல் மகளால் ஆடப்படுகிறது)
7. வீணை
8. வயலின்
9. முரளி
10. கிளாரினெட்
11. முகவீணை
12. கச்சேரி பேண்டு குழு (அல்லது) முகவீணை
13. வீணா நாட்டியம் (வீணைக்கருவியின் இசையுடன் ஆடப்படும் ஆடல்)
14. புஜங்க சுரம் (மகுடி)
15. புஜங்க நாட்டியம் (புஜங்க சுரத்தின் பக்க இசைக்கு ஆடப்படும் ஆடல்) மிடற்றிசை தொடங்குகிறது:
16. கீதம்
17. பிரபந்தம்
18. வர்ணம்
19. சூர்ணிகை
20. சுலோகம்
21. சீசபத்யம்
22. அஷ்டகம்
23. அஷ்டபதி
24. கீர்த்தனை
25. பதம்
26. ஜவாளி
27. தில்லானா
28. தேவாரம்
29. திருப்புகழ்
30. காவடிச்சிந்து
31. அருட்பா
32. பிள்ளைத்தமிழ்
33. தவளம்
34. பரணி
35. வெண்பா
36. கலித்துறை
37. கொச்சகம்
38. கலிப்பா
39. தாழிசை
40. ஆசிரிய விருத்தம்
41. மட்டி விருத்தம்
42. சலந்தை விருத்தம்
43. அம்மானை
44. வண்ணம்
45. உலா
46. வெண்ணிலா
47. குறவஞ்சி
48. இந்துஸ்தானி இசை
49. கன்னடப் பாடல்
50. ஊஞ்சல்
51. லாலி
52. ஹெச்சரிக்க
53. சோபானம்
54. மங்களம்
இசைக்கருவிகள்
55. திருச்சின்னம்
56. பூரி
57. தவளசங்கு
58. நபூரி
59. முகவீணை
60. பங்கா
61. ஒத்துடன் நாதசுரம்
62. டமாரம்
63. பஞ்சமுக வாத்தியம்
64. சங்கீத வாத்தியம் (நாதசுரம்/பெரியமேளம்)
65. தகோர வாத்தியம் (தாளம் இல்லாமல் டமாரத்தின் பக்க இசையுடன் நாதசுரம்)
66. ஜல்லரி வாத்தியம்
67. ஜய பேரிகை
68. நகரா
69. டங்கா
70. தமுர் வாத்தியம்
71. ராஜவாத்தியம்(தப்பட்டை பங்கையுடன்)
72. சர்வ வாத்தியம் : எல்லா துளைக்கருவிகளும், தோற்கருவிகளும் ஒன்றாய் ஒலித்தல். அப்போது நிறைவாக தீபாராதனை.
இதுவே சர்வ வாத்திய வழிபாட்டின் முறை ஆகும். உள்ளூர் வசதிக்கேற்ப இதில் மாறுதல் இருக்கலாம். சர்வவாத்திய வழிபாட்டு நிகழ்ச்சிக்கு 3, 4 மணி நேரங்கள் ஆகும்.
மிகப்பழமையான இவ்வழிபாட்டு முறையில் அவ்வப்பொழுது புதிதாக நம் இசைக்கு வந்து சேர்ந்த கருவிகள், இசை வடிவங்கள் ஆகியன வும் சேர்ந்துள்ளமையைச் சுட்டிக் காட்டுகிறார் பேராசிரியர். 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய ஜாவளி, காவடிச் சிந்து போன்ற இசை வடிவங்களையும், வயலின், கிளாரினெட் போன்ற கருவிகளையும் இதற்குச் சான்றுகளாகத் தருகிறார்.
இவ்வகைக் கருவிகள் அனைத்தும், கோவில் வழிபாட்டில் பங்கு பெற்றிருந்தன. பல கருவிகள் இன்று புழக்கத்தில் இல்லை. சில தொன்று தொட்டு இன்று வரை தொடர்ந்து பங்கு பெற்று வருகின்றன.
கவுத்துவம்
கோயில்களில் இறைவனுக்கு அர்ப்பணிக்கப் படுகின்ற கலைகளுள் ஒன்றான ஆடலில் கவுத்துவம், நவசந்தி கவுத்துவம் என இரண்டு வகைப்படும். இவ்விரு வகை கவுத்துவங்களும் கடவுள் சன்னதியில் இறைவனை வழிபடும் நடன நிகழ்ச்சிகளாக இருந்திருக்கின்றன.
சிவத்தலங்களில் பிர்ம்மோத்சவத்திற்காக கொடியேற்றும் போது நவசந்தி கவுத்துவமும், திருவாதிரை நாளில் நடராசர் புறப்படும் போது பஞ்சமூர்த்தி கவுத்துவமும் ஆடப்பட்டு வந்தன.
பஞ்சமூர்த்தி கவுத்துவம்
விநாயகர், முருகர், சம்பந்தர், சண்டிகேச்வரர், நடராசர் ஆகிய ஐவரைப் போற்றிப்பாடி ஆடுவது பஞ்சமூர்த்தி கவுத்துவமாகும்.
நவசந்தி
தமிழ்நாட்டில் சில சிவத்தலங்களில் பிரம்ம உத்சவத்திற்கு முன்பாகக், கொடியேற்றும் போது தேவதைகளைப் பக்தியுடன் பாடி ஆடும் ஆடல் வகையான நவசந்தி வழக்கத்தில் இருந்திருக் கின்றது. முதலில் கோவில்களில் இசைவடிவமாக இருந்து பின்னரே இது நாட்டிய வடிவம் பெற்றதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.
திருவிழா தடையின்றி நடைபெற வேண்டும் பொருட்டு, பிரம்மா, இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானியன் ஆகிய திசைக்காவலர்களைப் பூசித்தலே நவசந்தி கவுத்துவம். இதன் அமைப்பு தற்கால இலட்சண கீத அமைப்பு ஆகும். முதலில் ஜதியும், பின்பு சாகித்திய ரூபமாக அந்தந்த தேவர்களைப் புகழ்ந்து அன்னாருக்குப் பிரீதியான ராகம், தாளம், வாத்தியம், ஆரோஹணம், அவரோ ஹணம், நிருத்தம், ஹஸ்தம், பண் என்னென்ன என்று விளங்கக் கூறி இறுதியில் ஜதி சொற் கட்டுடன் முடிக்கப்பெறுகிறது.3 சான்றாக,
குபேர சந்தி
கருவி                : கந்தர்ப்பம்
இராகம்              : மாளவஸ்ரீ
நிருத்தம்            : சந்தியா நிருத்தம்
ஹஸ்தம்           : பத்மகதம்
தாளம்                : கொட்டரி
பண்                    : தக்கராகம்
இராகம்               : மாளவஸ்ரீ ஆ:  ஸமகமபநிதநிபதநிஸ்
தாளம்                 : திஸ்ர ஏகம் அ : ஸ்நிபமகஸ 22வது மேளத்தில்.
தாதெய் தெய்ந் தத்தா தத்தணத தக ஜொனுத
தத்திமிததா தாகிடத தணத தக்கிட ஜொனுத
சங்க நிதி பதுமநிதி முதலாம் குபேரன் சந்திகட் காயுதம்
பரிவாக தீரன் விளங்கு மடியார்க்கு நிதி அருளும் உபகாரன்
செங்கை மழு மானேந்தும் சிவபக்தி நேசன்
சீருடைய யக்ஷ சகுலாதிய உலாசன்
தங்கு நவரத்ன சிம்மாசன ப்ரகாசன்
தருவாத்யம் கந்தர்ப்ப செந்தரிகி வாசன்
மாளவஸ்ரீ ஸாகாமாபா நீதாநீ பாநீஸ்
வரு சந்தியா நிருத்தம் பத்மகத அஸ்தம்
தாளமது கொட்டரீக தத்தீதக ஜொம்தா
தக்க ராகப்பண் தனபால கவுத்வம்
தக்கு திக்கு தக்கிட தொங்கிட கிடதகடன் தங்கி
கிடதக திக்கி தாம் தத்த தாம்தத்த தாம்
ஆடற்கலைக்குப் பெருந்தொண்டாற்றிய தஞ்சை நால்வர் குடும்பத்தினர் தஞ்சைப் பெருவுடையாருக்குத் திருவிழா நடைபெறும் பொழுது, திருவிழா தடையின்றி நடைபெற திசைக் காவலர்களை வழிபட இயற்றிய நவசந்தி கவுத்துவங்களை அவர்களின் வழித் தோன்ற லான இசைப்பேரறிஞர் கே.பி. சிவானந்தம் அவர்களும் சுரதாளக் குறிப்புக்களுடன் திருமதி. வைஜயந்திமாலா அவர்களின் வாயிலாக பதிப்பித்திருக்கிறார். கோவில்களிலிருந்து இன்றைக்கு மறைந்து விட்ட கவுத்துவங்களை நூல்வாயிலாக இன்றைய தலைமுறைக்கு அறிமுகம் செய்த கே.பி. கிட்டப்பா, கே.பி. சிவானந்தம் அவர்களின் பணி போற்றத்தக்க தாகும்.
சிவன் கோவில்களில் கொடியேற்றத்தன்று எட்டுத் திக்குகளுக்கும் உரிய தேவதைகளுக்கு வழிபாடு செய்யப்படுகிறது. பிரம்மோற்சவம் முடியும் வரை ஊரில் எந்த விதமான இடை யூறும் ஏற்படாமல் அவ்வத்திசைகளில் இருந்து காக்கும்படி தேவதைகளை வேண்டுவதே இவ்வழிபாட்டின் நோக்கம் ஆகும்.  அவ்வாறு வழிபாடும் செய்யும் பொழுது தொடர்புடைய தேவதைகளுக்கான, பண்(தேவாரம்), இராகம் (நாதசுரம்), தாளம், கருவி, நிருத்தம் ஆகியன இடம் பெறுகின்றன.
சான்றாக, முதலில் பிரம்ம சந்தி:
                                         
கோபுர வாயில்: கிழக்கு
தியானம், ஆவாகனம், தூபம், தீபம், நைவேத்தியம், பலி ஆகியன முடிந்த பிறகு, தொடர்ந்து, “மஹாபேரீம் சந்தாட்யா தவண்டை’’ என்று அறிவித்ததும் கருவியைத் தட்டுவார்கள்.
பிறகு
பண்                    : மேச ராகம்
இராகம்              : மத்திமாவதி (நாதசுரம்)
தாளம்                : பிரம்ம தாளம் (தாளம்)
வாத்தியம்          : சச்சபுடம் (தவில்)
நிருத்தம்            : கமல நிருத்தம்
சகல வாத்தியம் : அனைத்துக் கருவிகளும்
இவ்வாறே எட்டுத் திசைகளுக்கும் நடை பெறும்.’’
வைணவக் கோவில்களிலும் கொடி யேற்றத்தன்று இத்தகைய வழிபாடு உண்டு.
இந்நூல் கோவில் வழிபாட்டில் இடம் பெற்ற கருவிகள், தெரிந்த கருவிகளின் அமைப்பு, பயன்பாட்டு முறையின் மரபு, இன்றைய நிலை, இவற்றை மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டு வர ஆலோசனைகள் என்று பல்வேறு களங்களில் உரத்துச் சிந்திக்கிறது.
வைணவத் தலங்களில் வைகானச முறையை மேற்கொள்ளும் கோயில்களில் விஷ்வக்ஷேணர், விஷ்ணு, சக்கரம், பிரம்மா, இந்திரன், அக்கினி, நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன், கருடன் ஆகியோருக்கு உகந்த தாளம் நிருத்தம், இராகம், கருவி ஆகியவற்றால் வழிபாடு நிகழ்த்தப்படுகிறது.
சான்றாக, கருடன்:
தாளம்   : ஜய தாளம்; நிருத்தம் : குஞ்சித பாதம்;
இராகம் : வசந்தா; கருவி: பேரி




நன்றி கேசவன்

பெங்களூர் நாகரத்தினம்மாள்

பெங்களூர் நாகரத்தினம்மாள்

பழங்காலத்திலிருந்து தற்காலம் வரை பெண்கள் இசைத் துறையில் புலமை பெற்றவர்களாகவும் சிறந்த பங்கினை ஆற்றி வருபவர்களாகவும் இருந்துள்ளனர். சிறந்த கலைஞர்களாகவும், படைப்பாளர்களாகவும், தியாகச்சீலர்களாகவும் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களில் குறிப்பாக தேவதாசி குடும்பத்தைச் சார்ந்த பெண்கள் பலர் இசையிலும் நாட்டியத்திலும் செய்த பணிகள் சிறப்பானவை. இவர்களில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராசரின் சீடராக வாழ்ந்தவர் பெங்களூர் நாகரத்தினம்மாள் ஆவார்.

பிறப்பு :

பெங்களூர் நாகரத்தினம்மாள் 1878 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி வழக்குரைஞர் சுப்பராவ் மற்றும் புத்துலட்சுமி அம்மாளுக்கு மகளாகப் பெங்களூரில் பிறந்தார். இவரது தாய் சிறந்த இசைப் பாடகியாவார். இவர் தேவதாசி குடும்பத்தைச் சார்ந்தவர். இவரது முன்னோர்கள் மைசூர் அரண்மனையில் கலைஞர்களாக விளங்கினர்.

கலைகள் பயிற்சி் :

பெங்களூர் நாகரத்தினம்மாள்

நாகரத்தினம்மாள் மைசூர் அரண்மனையில் இசைக்கலைஞராக இருந்த கிரிபத்த தம்மையாவிடம் இசைப் பயிற்சியையும், சமசுகிருதப் பயிற்சியையும் பெற்றார். வயலின் கலையை மைசூர் அவையில் வயலின் கலைஞராக விளங்கிய தம் மாமாவான வெங்கடசாமியிடம் பயின்றார். மேலும், முனுசாமி அப்பாவிடமும், கிருஷ்ணசுவாமி பாகவதரிடம் இசையும், வயலினும் கற்றார். சிறந்த கலைஞராக விளங்கினார்.

நாட்டியக் கலையைப் பெங்களூர் கிட்டண்ணாவிடம் பயின்றார். மேலும், சென்னை வெங்கடாசாரியிடம் அபிநயப் பயிற்சியையும் பெற்றார்.

இவர் தமது 15 வது வயதில் வீணை சேஷண்ணா இல்லத்தில் முதல் இசை நிகழ்ச்சியை வழங்கினார். இவரது இசைக்குப் பிடாரம் கிருஷ்ணப்பா மிகவும் ஆக்கமும், ஊக்கமும் கொடுத்தார். சிறந்த இசைப்பாடகியாக இவர் வெளிவரக் காரணமாகினார். நாகரத்தினம்மாள் மென்மையான குரலுடையவர். சிறந்த இசைப் பின்னணி உடையவர். இவற்றால் இசை உலகில் மிக உயர்வான நிலையை அடைந்தார். இவர் எந்நேரமும் தியாகராசரின் கீர்த்தனைகளைப் பாடிய வண்ணமே இருந்தார்.

நாகரத்தினம்மாள் எதுகுலகாம்போதி இராகம் பாடுவதில் வல்லவர். எல்லா அரங்கிலும் இவரின் எதுகுலகாம்போதியும், தியாகராசரின் எதுகுலகாம்போதி இராகக் கீர்த்தனையான “ஸ்ரீ இராமஜெயராமா” என்ற கீர்த்தனையும் ஒலித்த வண்ணம் இருக்கும்.

இவர் தமது ஒன்பது வயதிலேயே இசையிலும், நாட்டியத்திலும், வடமொழியிலும் சிறந்த புலமை பெற்றிருந்தார்.

நூலாசிரியர் :

இவர் தெலுங்கு, தமிழ், சமஸ்கிருதம் மற்றும் கன்னட மொழிகளை அறிந்தவர். இவர் “மத்யா பானம்” என்னும் தெலுங்கு மொழி நூலையும், சமசுகிருதத்தில் “ஸ்ரீதியாகராஜ அஷ்டோத்திட நாமாவளி” என்ற நூலினையும், தமிழில் “பஞ்சகீரண பௌதீக” என்ற நூலினையும் வெளியிட்டுள்ளார். மேலும், 18 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த முத்துப்பழனி என்பவரால் தெலுங்கு மொழியில் எழுதப்பட்ட “இராதிகாஸ்வயம் வரம்” என்ற நூலை 1947 மற்றும் 1952 ஆம் ஆண்டு மறுபதிப்பு செய்து வெளியிட்டுள்ளார்.

கதாகாலட்சேபக் கலைஞர் :

இவர் இசையோடுக்கூடிய கதாகாலட்சேபம் செய்வதில் வல்லவராகத் திகழ்ந்தார். இவர் வாழ்ந்த காலத்தில் ஆண்கள் மட்டும் கதாகாலட்சேபம் செய்த நிலை இருந்தது. அதனை மாற்றி முதன்முதலாகப் பெண் கதாகாலட்சேபக் கலைஞராக இவர் திகழ்ந்தார். இவரது தாயும் சிறந்த கதாகாலட்சேபக் கலைஞராவார். இவரின் இசைப் பயணத்திற்கு மைசூர் மகாராசா ஆக்கமும் ஊக்கமும் கொடுத்தார். சென்னை மக்களாலும் இவர் பெரிதும் ஆதரிக்கப் பெற்றார். வீணைதனம்மாள், ஏனாதி லட்சுமி நாராயணி, கோயம்புத்தூர் தாயி, பெங்களூர் தாயி, திருவாரூர் இராஜாயி போன்ற கலைஞர்களுடன் ஒப்பிட்டுக்கூறும் அளவிற்கு இசையுலகில் சிறந்த விற்பன்னராகத் திகழ்ந்தார். இசை உலககத்தார் இவரை பி.என்.ஆர் என்று அழைத்தனர்.

இவர் தமிழ்நாடு, ஆந்திரா முழுவதும் பயணம் செய்து சுமார் 1235 இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். 1929 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற “சநாதன தர்ம மாநாட்டில்” இவர் இசை நிகழ்ச்சியை வழங்கினார். இங்கு இவர் சமசுகிருதப் பாடல்களை மொழி சுத்தத்துடன் பாடி, அனைவரின் பாராட்டினையும் பெற்றார்.

தியாகராசர் சமாதி கண்டெடுப்பு :

நாகரத்தினம்மாள் 1920 ஆம் ஆண்டு காவிரி பாயும் திருவையாறு தலத்திற்கு வந்தார். அப்பொழுது தியாகராசரின் சமாதி இடம் வெறும் பிருந்தாவனமாகவே காட்சித் தந்தது. நாகரத்தினம்மாள் தியாகராசரின் சமாதியைக் காணாது வருந்தியபோது, தியாகராசர் இவரது கனவில் தோன்றி தமது சமாதி உள்ள இடத்தைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. 1921 ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் நாள் சமாதியை நினைவாலயமாகக் கட்டினார். 1925 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி தியாகராசரின் சமாதி ஆலத்திற்குத் திருக்குட முழக்குச் செய்தார். சமாதிக்குரிய இடத்தைத் திருவாளர்கள் மன்னா சாகேப் மற்றும் இராஜாராம் போன்றவர்களிடம் இருந்து பெற்றார். தியாகராசரின் சமாதியைச் சுற்றிலும் மண்டபம் கட்டினார். அங்கு தியாகராசரின் பாடல்களைக் கல்வெட்டுக்களில் வடித்தார். இவை இன்றும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவரின் பாடல்களை உலகோர் அறியும் வண்ணம் செய்தார்.

தியாகராசர் ஆராதனை நிகழ்வு :

திருவையாற்றில் தியாகராசர் மறைவுற்ற பகுலிபஞ்சமி நாளன்று குருநாள் நினைவு நாள் வழிபாடு நடத்தப் பெற்று வந்தது. அக்காலத்தில் இசைக் கலைஞர்கள் சின்ன கட்சி, பெரிய கட்சி என்ற இரு பிரிவுகளாக இருந்து இவ்விழாவை நடத்தி வந்தனர். அம்மையார் பெரிய கட்சியுடன் இணைந்து தியாகராச ஆராதனை நிகழ்வை 5 நாள் விழாவாக நடத்தினார். இந்நிகழ்விற்காகத் தான் தேடிவைத்திருந்த செல்வங்களைச் செலவழித்தார். குரு தியாகராசர் நினைவோடு வாழ்ந்து வந்தார். பெங்களூர் அம்மையார் திருவையாற்றிலேயே தங்கினார்.

நாகரத்தினம்மாள் தமது இறுதிக் காலத்தைத் திருவையாற்றிலேயே கழித்தார். தியாகராசரின் பாடல்களைப் பாடுவதே நோக்கமாகக் கொண்டு வாழ்ந்த இவர் 1952 ஆம் ஆண்டு தமது 74வது வயதில் காலமானார். தமது கடைசி ஆசையாகத் தன்னுடைய சமாதியைத் தியாகராசரின் சமாதிக்கு எதிரில் வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இன்று திருவையாற்றில் தியாகராசரின் சமாதிக்க நேரெதிரில் இவரின் சமாதி உள்ளது. தியாகராசரின் ஆராதனையின் பொழுது இவருக்கு இன்றும் ஆராதனை செய்யப்படுகின்றது.

பெற்ற விருதுகள் :

இவர் தம் வாழ்நாளில் விருதுகள் பலவற்றைப் பெற்றார். 1932 ஆம் ஆண்டு “வித்யா சுந்தரி” விருதினையும், 1949 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் இவருக்கு “தியாக சேவ கத்தா” விருதினையும் வழங்கி கௌரவித்தார்.

கலைஞர்கள் இசையின் மூலம் சமுதாயத்திற்கும் தேசத்திற்கும் தொண்டாற்றினர். இவர்களில் நாகரத்தினம்மாள் “தியாகராசரின் தாசி” எனத் தன்னை அழைத்துக்கொண்டார். இதனை மையமிட்டுத் தற்பொழுது “தியாகராசரும் தேவதாசியும்” என்ற ஆங்கில நூல் வெளிவந்துள்ளது. இந்நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, “தேவதாசியும் மகானும்” என்ற பெயரில் வெளிவந்துள்ளது.

நாகரத்தினம் அவர்களின் வாழ்க்கையில் முற்பகுதியை இசைக்காகவும், பிற்பகுதியைத் தியாகராசரின் புகழ் பரப்பிற்காகவும் செலவிட்டார். இவர் ஆரம்பித்து வைத்த ஆராதனை விழா நிகழ்வு திருவையாற்றில் மிகச்சிறப்போடு இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. மிகச்சிறந்த இசையஞ்சலி விழாவாக அமைந்து விளங்குகிறது. பல நூறு இசைக் கலைஞர்கள் இச்சமாதியின் முன்பு இசையஞ்சலி செலுத்தி வருகின்றனர். குருவிற்குச் செய்யும் சிறப்பு விழாவாக நடந்து வருகிறது. பல்லாயிரம் சுவைஞர்கள் போற்றிவரும் மிகச்சிறந்த விழாவாக நடந்து வருகிறது. நேரில் கண்டு களிப்போர் பலர். தொலைக்காட்சி செய்தித்தாள்கள் வழி அறிந்து மகிழ்ந்து வருவோர் பலர். உலகில் தலை சிறந்த இசை விழாவாக நடந்து வருகிறது. இத்தகு விழாவை நடத்திய மங்கையர் மாணிக்கம் பெங்களூர் நாகரத்தினம் அம்மாள் பணியை இசை உலகம் நன்றியோடு வணங்கி மகிழ்கிறது.


நன்றி
முனைவர் செ.கற்பகம்
உதவிப் பேராசிரியர்
இசைத்துறை

நாட்டிய கலைஞர் த.பாலசரஸ்வதி


த.பாலசரஸ்வதி

ஸ்ரீமதி பாலசரஸ்வதி அவர்கள் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ் பெற்ற கலைஞர்களுள் ஒருவராவர். இவர் 1918 ஆம் ஆண்டு மே மாதம் பதின்மூன்றாம் தேதி பிறந்தார். இவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இசையிலும் நாட்டியத்திலும் புகழ் பெற்ற கலைஞர்களாகத் திகழ்ந்தனர். 18 ஆம் நூற்றாண்டில் இவரது பாட்டியின் தாயார் பாப்பம்மாள் தஞ்சாவூர் சமஸ்தானத்தில் புகழ்பெற்ற கலைஞராவார். இவரது பாட்டி வீணா தனம்மாள் (1867-1938) பல புகழ்பெற்ற இசைக் கலைஞர்களை உருவாக்கியுள்ளார். இவரது தாயார் ஜெயம்மாள் (1890-1967) சிறந்த சங்கீத புலமை பெற்றவராகவும் தமது மகள் பாலசரஸ்வதிக்குக் கலைத்துறைக்கு ஊக்கமளிப்பவராகவும் இருந்தார். இவர் நடனத்துறையில் புத்துணர்ச்சி மலர காரணமாயிருந்தார். பரத நாட்டியம் மரபுவழி வந்த தேவதாசிகளால் மட்டும் ஆடப்பட்டு வந்தது. அனைவராலும் ஆடப்படக்கூடிய அற்புதமான கலை எனப் போராடினர். மேலும், இவர் கையாளுகின்ற பாத வேலைப்பாடுகளும், அடவுகளும், முகபாவங்களும் அனைவரையும் அதிசயிக்க வைத்தன. முதன் முதலில் தென்னிந்தியாவை விட்டு 1934இல் கல்கத்தாவில் மேடை கலை நிகழ்ச்சியாக அறிமுகப்படுத்தினார். உலகம் முழுவதும் தமது கலைப் பயணத்தை தொடர்ந்து புகழ் பெற்ற நாட்டியப் பெண்மணியாகத் திகழ்ந்தார். 1977இல் தெய்வீக நாட்டியக் கலைஞர் என நியூயார்க் டைம் பத்திரிகையின்மூலம் உலகம் முழுவதும் பாராட்டப்பட்டார். பிரதமர் விருது, சங்கீத நாடக அகாடமி விருது ( 1955 ), பத்ம விபூஷன் விருது (1977), சங்கீத கலாநிதி சென்னை, மியூசிக் அகாடமி விருது (1973) என பல புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றுள்ளார். பாலசரஸ்வதி அவர்கள் நாட்டியத்துறையில் நூல்கள் எழுதியுள்ளார். ஆண்டு தோறும் சென்னையில் நடைபெறும் இசைவிழாவில் சங்கீத வித்வத் சபையில் ஆராய்ச்சி கட்டுரைகள் பல வழங்கி சொற்பொழிவுகளும் ஆற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் பாலசரஸ்வதி அகாடமியை நடத்தி வந்தனர். தற்பொழுது அவரது வம்ச வழியினரால் பாதுகாக்கப்பட்டு தொடர்ந்து பல மாணவர்களை உருவாக்கி நடத்தி வருகின்றனர். இவரது மகள் ஸ்ரீமதி லட்சமி அவர்கள் (1943-2001) அவரது தாயார் பரத நாட்டியத்தில் கையாண்ட முறையைப் பின்பற்றிக் கலையை வளர்த்து வருகிறார். பால சரஸ்வதி அம்மையர் அவர்களால் பரதக் கலையானது புத்துயிர் பெற்று மறுமலர்ச்சியடைடந்தது என்றால் மிகையாகாது.

நன்றி
முனைவர் இரா.மாதவி
உதவிப் பேராசிரியர்
இசைத்துறை

கஞ்சீரா வித்துவான் மாயவரம் ஜி.சோமசுந்தரம்


கஞ்சீரா வித்துவான் மாயவரம் ஜி.சோமசுந்தரம்

இசை உலகில் புகழுடன் விளங்கிய பல பெரிய மேதைகளுள் மாயவரம் ஜி.சோமசுந்தரம் அவர்களும் ஒருவர் ஆவார். திரு சோமசந்தரம் அவர்கள் மாயவரம் எனப்படும் மயிலாடுதுறையில் 1928ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 10 ஆம் தேதி பிறந்தார். தாய் திரவோணத்தம்மாள், தந்தை கோவிந்தசாமி ஆவார்.

குருவிடம் பயிற்சி
திரு சோமு அவர்கள் இளம் வயதுமுதல் இசையில் குறிப்பாக தாள இசைக்கருவியில் ஆர்வம் மிகுந்தவராகக் காணப்பட்டார். தமது பத்தாவது வயதில் தவில் வித்துவான் திருமுல்லைவாயில் முத்துவீரப்பிள்ளையிடம் தவில் பயின்றார். தமது 15 வயதில் கச்சேரி வாசிக்க ஆரம்பித்தார். அக்காலத்தில் தவில் வித்வான்களோடு உரித்தான மரியாதை அளிக்கப்படுவதில்லை என்பது அறிந்து வசதி மிகுந்த குடும்பத்தில் பிறந்த சோமு சிறிய பெட்டிகடை வைத்து நடத்தினார். பின்னர் திரு சிவக்கொழுந்து கஞ்சிரா கலைஞரிடம் கஞ்சிரா கற்றுக்கொண்டார். அவருடன் கச்சேரிகளுக்குச் சோமு சென்றுவந்தார். பின் குத்தாலம் சிவ வடிவேல் பிள்ளையிடம் கஞ்சிரா பயின்றார்.

திருமணம்
திரு சோமு அவர்கள் தமது 16 ஆம் வயதில் வைகாசி மாதம் 14 ஆம் தேதி 1945 ஆம் ஆண்டு ராமாமிர்தம் அம்மையாரை மணம் முடித்தார். திருமண ஊர்வலத்தில் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை அவர்களுடைய நாதஸ்வர நிகழ்ச்சியும், திரு வி.சடகோபன் அவர்களின் நிகழ்ச்சியும் நடந்தேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

கலைப்பணிகள் மற்றும் வாசித்த கச்சேரிகள்

1950 ஆம் ஆண்டு திருப்பாம்புரம் திரு சுவாமிநாதபிள்ளை அவர்கள் உதவியால் சென்னையில் வந்து குடியேறினார். பிறகு சோமு அவர்களுக்குச் சீர்காழி கோவிந்தராசன் அவர்களுடன் இணைந்து வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எட்டு ஆண்டுகள் சீர்காழி கோவிந்தராசன் அவர்களுடன் இணைந்து பல்வேறு ஊர்களில் கச்சேரி வாசித்துள்ளார்.

மதுரை சோமுவுடன் அனுபவங்கள்

மதுரை சோமு அவர்களுடன் இணைந்து மாயவரம் சோமு பல நிகழ்ச்சிகள் வாசித்துள்ளார். மதுரை சோமு அவர்களுக்குச் கச்சேரி இல்லாத நாட்களே இருக்காது. தினமும் கச்சேரி இருக்கும். சில நேரங்களில் வேறு ஒரு கஞ்சிரா கலைஞர் வாசிக்குமாறு அழைத்துவிட்டால் அந்தக் குறிப்பிட்ட தினத்திற்கு உண்டான சன்மானத்தை மாயவரம் சோமுவுக்கு மதுரை சோமு அவர்கள் அளித்து விடுவார். அந்த அளவிற்கு இருவரும் நெருங்கிப் பழகி இருந்தனர்.

மதுரை சோமுவின் எல்லா நிகழ்ச்சிகளிலும் கஞ்சிரா நிரந்தரமானது. வயலினும் மிருதங்கமும் ஒவ்வொரு கச்சேரிக்கும் மாறும். இவ்வாறு 30 ஆண்டுகள் மாயவரம் சோமு மதுரை சோமுவுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். பாம்பே, டெல்லி போன்ற இடங்களிலும் நிகழ்ச்சிகளுக்குச் சென்று வந்திருக்கின்றனர்.

மாயவரம் சோமு அவர்கள் வாசித்த கச்சேரிகள்

இசை அரசு எம்.எம். தண்டபாணிதேசிகர், திருமதி கே.பி.சுந்தராம்பாள், எம்.கே.தியாகராஜ பாகவதர், ஆலத்தூர் சாகோதரர்கள், சித்தூர் சுப்பிரமணியம்பிள்ளை, திருவாரூர் நவச்சிவாயம், மதுரை சோமு, எம்.எல்.வசந்தகுமாரி, சீர்காழி கோவிந்தராஜன், லால்குடி. ஜி.ஜெயராமன், மதுரை டி.என்.சேஷகோபாலன், புல்லாங்குழல் என். ரமணி, பம்பாய் சகோதரிகள், குன்னக்குடி வைத்தியநாதன், டி.வி.சங்கர நாராயனன், ஓ.எஸ். தியாகராஜன், கே.ஜே. ஜேசுதாஸ், நெய்வேலி சந்தான கோபாலன் போன்ற புகழ்பெற்று விளங்கிய கலைஞர்களின் நிகழ்ச்சிகளில் கஞ்சிரா வாசித்த பெருமைக்குரியவர் ஆவார்.

மாயவரம் சோமு அவர்களுடன் இணைந்து வாசித்த மிருதங்க வித்வான்கள்

மாயவரம் சோமு முருகபூபதி அவர்களுடன் இணைந்து பதினைந்து வருடங்கள் வாசித்துள்ளனர், பழனி சுப்ரமணியம் பிள்ளை, இராமநாதபுரம் சி.எஸ்.முருகபூபதி, தஞ்சாவூர் டி.கே.மூர்த்தி, பாலக்காடு, வெங்கடேஸ்வரராவ், உமையாள்புரம் சிவராமன், காரைக்குடி மணி, கமலாகர்ராவ், குருவாயூர்துரை, திருச்சி சங்கரன், திருவாரூர் பக்தவச்சலம், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ், டி.வி.கோபாலகிருஷ்ணன் போன்றோர் ஆவார்.

மாயவரம் ஜீ.சோமு அவர்கள் பெற்ற விருதுகள்

11.3.1993-இல் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் கலைமாமணி என்ற விருதினை அளித்து கௌரவித்தது.

18.11.2000-இல் முத்தமிழ்ப் பேரவையில் சோமு அவர்களின் கலைத் தொண்டினைப் பாராட்டி பெரிய செல்வமும் பொற்பதக்கமும் வழங்கி கௌரவித்தது.

2000-இல் ஸ்ரீ பஞ்சமுகந்வாரஸ ஆஞ்சநேயர் ஜெயந்தி மகோத்ஸவத்தில் பத்மபூஷன் ஸ்ரீ பி.எஸ் நாராய்ணஸ்வாமி அவர்களால் ‘லய வாத்ய சிரோன்மணி’ என்கிற பட்டத்தை வழங்கி கௌரவித்தது

சபாவில் நாயகி விருதும் ரூ.10000 வழங்கி கௌரவித்தது.

பாபநாசம் சிவன் விருது ஸ்ரீ சந்சங்கா பாபநாசம் சிவன் கர்நாடக சங்கீத சபாவால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

2010 மதுரையில் சங்கரபூதி விருது சங்கரபூபதி டிரஸ்டில் வழங்கப்பட்டது.

லயஞான யோகா விருதும் ரூ.5,000ம் 2010ல் (சென்னை வில்லிவாக்கமும்) ஓம் கார நாத பிரம்மகான மண்டல விருது வழங்கி கௌரவித்தது.

1.1.2012-ல் சென்னை மியூசிக் அகாடமி டி.டி.கே. விருது 25,000ம் வழங்கி கௌரவித்தது.

தாளசுரபி, லயவின்யாச விசாரதா, கஞ்சிரா செல்வம், இசைமாமுரசு போன்ற விருதுகளும் கிடைக்கப் பெற்றார்.
மாயவரம் சோமு அவர்களின் வெளிநாட்டுப் பயணங்கள்

ஸ்ரீலங்கா, சிங்கப்பூர், பினாங்கு, லண்டன் போன்ற வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டார். மாயவரம் சோமு அவர்கள் தலைமையில் லண்டனில் சிம்ம நந்தன் தாளத்தில் தாள வாத்யம் நடைபெற்றது. இதற்கு திரு சோமு அவர்களே லய சம்மந்தமான சோர்வைகள் வடிவமைத்து அதனை வெற்றி பெறச் செய்தார்.



நன்றி
முனைவர் இரா.மாதவி
உதவிப் பேராசிரியர் இசைத்துறை தமிழ் பல்கலைகழகம்

தவில் வித்வான் நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை -1894-1949


தவில் வித்வான் நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை  -1894-1949

சென்ற நூறு ஆண்டுகளில் தவில் வித்வான்கள் எத்தனையோ பேர் இருந்திருக்கிறார்கள். அவர்களில் நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை மிகவும் பிரசித்திப்பெற்ற ஒருவர். இவர் 3.9.1894 அன்று பிறந்தார். இவருடைய தாய் தெய்வயானையம்மாள் என்பவர்.

இவர் புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தியிடம் மிக்க மரியாதையுடையவர். இவர் கஞ்சிராவும் வாசிப்பதுண்டு. ஒரு பிரபல கச்சேரியில் புதுக்கோட்டையார் மிருதங்கம் வாசிக்க இவர் கஞ்சிரா வாசித்தார். மீனாட்சிசுந்தரம் தமது மாமன் நீடாமங்கலம் தவில் வித்துவான் கோவிந்த தவில்காரரிடம் தவில் வாசிக்கும் பயிற்சி பெற்றார். தவில் வாசிப்பில் தமக்கென்றே ஒரு பாணி அமைத்துக்கொண்டு சம்பாத்தியத்தில் சிறிதும் வழுவாமல் தவில் வாசிப்புக் கலையை நாடு முழுமையும் போற்றும்படிச் செய்தார். பல நுணுக்கங்களில் சிறப்பான தேர்ச்சியை இவர் வாசிப்பால் காணமுடியும்.

சிறிது காலம் நாகூர் சுப்பையா, செம்மனார் கோயில் இராமசாமி ஆகியோருடைய நாதசுரத்திற்கு தவில் வாசித்து வந்தார். பிறகு திருவீழிமிழலைச் சகோதரர் இருவரிடம் வாசிக்கத் தொடங்கி 30 ஆண்டு காலம் அவர்களுக்கு வாசித்து வந்தார். இவருடைய வாசிப்பைக் கேட்ட மாங்குடி சிதம்பர பாகவதர் 2 நாதசுரங்களோடு ஒத்து மூன்றாவது நாதசுரமோ என்று ஐயுரும்படி ஒலிக்கிறது என்று புகழ்ந்தாராம். திருவாரூரில் மலைக்கோட்டை பஞ்சாபகேச பிள்ளையோடு வாசிக்கும் போது கச்சேரியைக் கேட்டுக் கொண்டிருந்த காஞ்சிபுரம் நயினாப்பிள்ளை, கொன்னக்கோல் பக்கிரி ஆகிய இசை மேதைகள் இவருடைய பெரும் சாதனையை மிகவியந்து பாராட்டியிருக்கிறார்கள். ‘நம்’ என்ற சொல்லை அவர் கையாண்ட விதத்தில் இன்றுவரை வேறொருவருமே வாசிக்கவில்லை என்று முதிர்ந்த தவில் கலைஞர்கள் கூறினர்.

நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் தமிழ் நாட்டில் பல சமஸ்தானங்களில் பாராட்டும் பரிசும் பெற்றார். சென்னையில் ஒருமுறை அவர் வாசித்தபோது சென்னை கேசவப்பெருமாள் கோயிலில் தங்கத்தாலான தவில் வாசிப்புக் குச்சி இவருக்குப் பரிசாக வழங்கினார்கள். தவிலரசு, அபிநவ நந்தீசர், படஹராத்யப்ரவீண போன்ற பல பட்டங்கள் இவருக்குத் தாமே வந்தன.

இவருடைய மருகர் நாச்சியார்கோயில் இராகவப்பிள்ளை என்பவர் இவரது முக்கியசீடர். திருவாவடுதுறை இராஜரத்தினம், திருவெண்காடு சுப்பிரமணியன் ஆகியோருக்குத் தவில் வாசித்தார். இளமையிலேயே தவில் வல்லவராகித் தம் குருவிற்கே பெருமை தேடித்தந்தவர். தனித்தவில் அல்லது ஸ்பெஷல் தவில் எனும் சொல்லாட்சித் தோன்றி நிலவ வித்திட்டார்.

திருமணம்

பசுபதிகோவில் வீரபத்திரத் தவில்காரர் என்பவர் மைசூர் சமஸ்தான வித்வானாயிருந்தவர். அவருடைய மகள் நாகம்மாளை மீனாட்சிசுந்தரம் பிள்ளை 10.2.1913 அன்று திருமணம் செய்துகொண்டார்.

சீடர்கள்

பந்தணை நல்லூர் ரத்தினம் பிள்ளை, கூறைநாடு கோவிந்தராசுபிள்ளை, திரு நாகேஸ்வரம் ரத்தின சுவாமி பிள்ளை, நாச்சியார் கோவில் இராகவப்பிள்ளை, ஈமணி ராகமையா, திருவிழந்தூர் வேணுகோபாலபிள்ளை, கரந்தை ஷண்முகம் பிள்ளை கண்டியூர் முத்தையாபிள்ளை, மிருதங்க வித்வான் கோயம்புத்தூர் ராமசாமிப்பிள்ளை, கடம்வித்வான் ஆலங்குடி ராமச்சந்திரன் முதலியோர், மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் சீடர்களிற் சிலர்.

ஸ்ரீவாஞ்சியம் கோவிந்தப்பிள்ளை, வழுவூர் முத்துவீரப்பிள்ளை, அம்பகரத்தூர் மலைப்பெருமாள் பிள்ளை, அம்மாசத்திரம் கண்ணுசாமிபிள்ளை, அம்மாப்பேட்டை பக்கிரிப்பிள்ளை, இப்படியான பல தவில் மேதைகளின் வாசிப்பை அடிக்கடி கேட்கவும் அதைத் தம் தொழில் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்திக்கொள்ளவும் மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்கு வாய்ப்புகள் நிறைந்தன.

இந்தியாவில் மட்டுமன்றி இலங்கையிலும் சென்று வாசித்துப் புகழ் பெற்றிருந்தார். அவருடைய புதல்வரான சண்முகவடிவேலும் மிக்க புகழோடு தவில் வாசித்து வந்தார். மீனாட்சி சுந்தரம் அவர்கள் 12.2.1942இல் காலமானார். இந்தத் தவில் மேதையின் பெயரும் புகழும் தவில் வாத்தியம் உள்ளளவும் நிலைத்திருக்குமென்றால் ஐயமில்லை.


நன்றி
முனைவர் இரா.மாதவி
உதவிப் பேராசிரியர்
இசைத்துறை

ராஜா சர். அண்ணாமலை செட்டியார்


ராஜா சர். அண்ணாமலை செட்டியார்



பிறப்பு

சமூக நோக்கும் மனித நேயப் பண்பாடும் வளர்ந்தோங்கிய நகரத்தார் சமுதாயத்திலே பெருஞ்செல்வமும் செல்வாக்கும் பெற்றிருந்த இளையாத்தங்குடி பட்டணசாமி பிரிவைச் சேர்ந்த சா.ராம.முத்தையாச் செட்டியாரும் ஒருவர். இவரின் நான்கு புதல்வர்களில் நான்காமவராக 1881 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 3ஆம் நாள் இராமநாதபுரம் மாவட்டம் கானாடுகாத்தான் என்கிற ஊரில் பிறந்தவரே அரசர் அண்ணாமலைச் செட்டியார். தெய்வபக்தி, அறச்சிந்தனை, தொழில் அர்ப்பணிப்பு ஆகியன மேலோங்கிய குடும்பத்தில் பிறந்ததினால் “கருவில் அமைந்த திருவே” இவரின் பிற்காலத்திய சாதனைகள் அனைத்திற்கும் அடிப்படையாக அமைந்தது எனலாம்.

கல்வி

தொடக்கக் கல்வியினைச் சொந்த ஊரான கானாடு காத்தானிலேயே பயின்ற அரசர் அண்ணாமலைச் செட்டியார் ஆங்கில அறிவினை அபிவிருத்தி செய்வதற்காக உள்ளூர் அஞ்சலக அதிகாரியிடம் அனுப்பி வைக்கப்பட்டார். வணிகக் குடும்பத்தில் உதித்தவர் என்ற போதிலும் தன்னைச்சுற்றி எப்போதும் வியாபார ரீதியிலான சூழல் அமைந்தாலும் அண்ணாமலையாரைக் கவர்ந்தது நூல்களும் ஏடுகளுமே. கரூரில் உயர் கல்வியினைப் பெற்ற அரசருக்குத் தான் கற்ற நூல்களில் மிகவும் கவர்ந்தது திருக்குறள்.

இளைஞரான அண்ணாமலையார் வியாபார நுணுக்கங்களை நன்கு அறிந்தார். இது தொடர்பாக பர்மா, மலேசியா மற்றும் கிழக்கிந்தியத் தீவுகள் வரை சென்று தம் நிறுவனங்களின் செயல்பாட்டினைச் செயல்பட வைத்தார். புதிய யுக்திகளைப் புகுத்தியதால் வருமானம் பன்மடங்காகியது. இச்சாதனையை அண்ணாமலைச் செட்டியார் நிகழ்த்தியபோது அவரின் வயது முப்பது.

அண்ணாமலைச் செட்டியாருக்குப் பணம் ஈட்டுவது மட்டுமே நோக்கமாக இருக்கவில்லை. உலகின் அன்றாட வளர்ச்சிகளை நேரில் கண்டு பூரிப்பதிலும் மகிழ்வு கொண்டார். காசி முதல் இராமேசுவரம் வரை புனிதத் தலங்களைத் தரிசித்தார். இது தவிர பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ் இங்கிலாந்து உள்ளிட்ட பல வெளிநாடுகளையும் வலம்வந்து வங்கித் தொழில் வளர்ச்சியை ஆய்வு செய்தார்.

இவரின் அனுபவ செறிவினைக் கண்ட செட்டிநாடு வாழ் மக்கள் அரசரை காரைக்குடி நகராட்சித் தலைவராக்கி மகிழ்ந்தனர். இதுதான் அவர் ஏற்றுக் கொண்ட முதல் மக்கள் சேவைப்பணி, அரசரின் சேவையினைக் கருத்தில் கொண்டு அன்றைய அரச நிர்வாகத்தார் அண்ணாமலைச் செட்டியாருக்க இராவ் பகதூர் திவான் பகதூர் ஆகிய பட்டங்களை வழங்கிக் கௌரவித்தனர்.

1916ஆம் ஆண்டு சென்னை ராஜதானியின் சட்டமன்ற உறுப்பினரானார். 1921 ஆம் ஆண்டு தில்லியில் பாராளுமன்றத்தின் மேலவை உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார். இப்பொறுப்பில் மூன்ற முறை அங்கம் வகித்தார். அன்றைக்கு சமூகத்தின் உயர்நிலையில் இருப்பவர்கள் இடம் பெற்றிருந்த “லிபரல் கட்சி” இவரையும் அழைத்தது. அழைப்பினை ஏற்றார்.

சிதம்பரத்தில் உறையும் ஆனந்த நடராஜர்தான் அண்ணாமலைச் செட்டியாரின் குலதெய்வம். இதன் காரணமாக இவ்வூரில் உயர்பள்ளி ஒன்றினையும் நிர்வகித்து வந்தார். பின்பு, மதுரையில் 1920ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் நாள் தம் தாயார் பெயரில் “ஸ்ரீ மீனாட்சி கல்லூரி” யினை அமைத்தார்.

1912ஆம் ஆண்டு தம் உறவினர்களையும், நண்பர்களையும் பங்கு தாரர்களாகக் கொண்டு “இந்தியன் வங்கி” என்ற ஸ்தாபினத்தைத் தொடங்கினார்.

நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தினர் கோவில் திருப்பணிகள், அன்னசத்திரங்கள், சமஸ்கிருதப் பாடசாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றை உருவாக்கிப் பராமரிப்பதை மனிதகுலச் சேவையாக, அறப்பணியாக செயல்படுத்தி வந்த்தார்கள். அண்ணாமலைச் செட்டியார் இதிலிருந்து சற்று மாறுபட்டு கல்வியும் மருத்துவமுமே நமது சமுதாயத்தின் அடிப்படை தேவை என்ற எண்ணங்கொண்டிருந்தார். எனவே ,இரண்டுக்கும் தாராள தானங்கள் செய்தார்.

தமிழில் தொன்மையான நூல்களை வெளியிடவும், ஆய்வுகள் பல மேற்கொள்ளவும், அழிந்து போகவுள்ள அரியக் கலைச் செல்வங்களைத் திரட்டிப் பதிப்பிக்கவும், தனித்தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்றை அமைத்து அதில் தமிழர்களின் தமிழ் அறிவுடமைச் சார்ந்த சொத்துக்களுக்கும் முன்னுரிமைத் தர விரும்பினார். தமிழர் பண்பாடு பாதுகாக்கப்பட உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு 1927ஆம் ஆண்டு சிதம்பரத்தில் வடமொழிக் கல்லூரியும், தமிழ்க் கல்வியும் உருவாக்கப்பட்டன. தொடர்ந்து வித்வான் கல்லூரியும் இசைக் கல்லூரியும் தோற்றுவிக்கப்பட்டன. 1928ஆம் ஆண்டு ஒரு பல்கலைக்கழகத்தினை நிறுவுவதற்கான முறையான திட்ட அறிக்கையினை அரசிடம் பணித்தார் அரசர். இதற்கான மசோதா உடனடியாக நிறைவேற்றப்பட்டு 1929ஆம் ஆண்டு சனவரி 1 ஆம் தேதி அண்ணாமலைப் பல்கலைச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அப்போதைய ஆளுநராக இருந்த எச்.ஜி.சர்.ஜார்ஜ் பிரடெரிக் ஸ்டான்லி அவர்களால் 1930 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் நாள் பல்கலைக்கழகம் முறைப்படி துவக்கப்பட்டது. முதல் துணைவேந்தராக சர் சாமுவேல் அரங்கநாதன் பொறுப்பேற்றார். 1929 இல் இங்கிலாந்து மன்னர் “ராஜா” என்ற பட்டத்தினை அண்ணாமலைச் செட்டியாருக்கு வழங்கிச் சிறப்பித்தார். அன்று முதல் ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் என்றபெயர் நீடித்து நிலைத்தது.

அண்ணாமலைச் செட்டியார் இசை மீது வைத்திருந்த பற்று அலாதியானது. குறிப்பாகத் தமிழிசை மேம்பாட்டில் அதிக அக்கறை கொண்டிருந்தார். இசைக்கான ஒரு கல்வி அமைப்பினை உருவாக்கியவரும் இவரே. தமது பல்கலைக்கழகத்தின் மற்ற முக்கியத் துறைகளுக்கு இணையான அந்தஸ்தினைத் தமிழிசை பிரிவிற்கும் தந்தார். இவ்விசை வடிவம் புத்துயிர் பெறுவதற்காக உரிய வழி வகைகளை ஆராய அண்ணாமலை நகரில் இரண்டு பெரிய மாநாடுகளை நடத்தினார்.

தமிழிசைக்குத் தமது இறுதிக் காலம் வரை தம்மால் இயன்ற தொண்டுகளைச் செய்து வந்த ராஜா அண்ணாமலைச் செட்டியார் 1948ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் ஆடலரசனின் திருப்பாதங்களைச் சரண் அடைந்தார்.

ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் தமிழிசைச்சங்கம்

1943ஆம் ஆண்டு தமிழிசைச் சங்கம் நிறுவினார். ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார், புகழ்மிக்க இசைக் கலைஞர்களை ஒன்று திரட்டி அவர்களிடம் மறைந்திருந்த இசைப் பெருஞ் செல்வங்களை வெளிக் கொணர்ந்தார். தமிழிசை ஆராய்ச்சிகளை ஊக்குவித்தார். சுரதாளக் குறிப்புடன் (Notation) கூடிய இருபது தமிழிசைப்பாடல் தொகுதிகள் (916 பாடல்கள்) வெளிவரவும். உதவி புரிந்தார். இப்பெருமை மிக்க பணியில் அரசருடன் இணைந்து பாடுபட்டார். அரசரின் நெருங்கிய சகாவான சர். ஆர்.கே.சண்முகம் செட்டியார் தமிழகத்தில் தமிழிசை இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட முழுப் பெருமையும் இந்த பெருமகனார்கள் இருவரையுமே சாரும். இதற்காக தமிழர்களம், தமிழ் கூறும் நல்லுலகத்தின் இசை உலகத்தவரும் இவர்களுக்கு என்றென்றும் நன்றிக் கடன் பட்டுள்ளனர். அரசரின் இந்தசேவை தமிழக வரலாற்றிலும், தமிழர் தம் இசை வரலாற்றிலும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய தகுதியினை எட்டியுள்ளது. தமிழிசை இயக்கத்திற்கு இறுதிக்காலம் வரை தம்மால் இயன்ற தொண்டுகளை செய்து வந்தார். சென்னை மாநகரின் பிரதானப் பகுதியில் பிரம்மாண்டமாக்க் காட்சி தரும் ராஜா அண்ணாமலை மன்றம் இன்றைக்கும் அன்னாரது பெருமையினைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

அண்ணாமலைச் செட்டியாரின் மூத்தப் புதல்வரான டாக்டர் ராசா சர் முத்தையாச் செட்டியாரது தமிழிசைப் பணிகள் மரபு வழி வந்த மாண்பாகும். ஒரு கட்டத்தில் பொது வாழ்விலிருந்து விலகிய இவர் பல்கலைக்கழக வளர்ச்சியையும், தமிழிசை மேம்பாட்டிற்கான பணிகளையுமே தமது இரு பெரும் நோக்கங்களாகக் கொண்டு செயல்பட்டு வந்தார்.

ஏறக்குறைய அரை நூற்றாண்டாக மங்கிப் போய்விட்ட தமிழிசையை முன்பிருந்த நிலைக்கு உயர்த்த வேண்டும் எனப் பாடுபட்டார். சென்னையில் அண்ணாமலை மன்றத்தை நிறுவி இசை விழாக் காலத்தில் அங்கே தமிழிசை விழாக்கள் நடக்கக் காரணமாக இருந்தார்.

தந்தையார் காலத்தில் சென்னையை மையப்படுத்தி இருந்த தமிழிசைப் பணிகளை தமிழகத்தின் இதர நகரங்களுக்கும் விரிவுபடுத்த திருச்சி-மதுரை போன்ற நகரங்களிலும் மன்ற அமைப்புகள் துவக்கப்பட்டன. மதுரையில் உள்ள எழில் நிறைந்த “முத்தையா மன்றம்” துவக்க விழாவில் அன்றைய முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரன் அரசர் அவர்களுக்கு “தமிழிசைக் காவலர்” என்ற பட்டத்தினை வழங்கிப் பாராட்டினார். நூற்றாண்டு விழா நிறைவுற்ற குமார ராஜா முத்தையா செட்டியார் அவர்கள் தம் தந்தையின் அடிச்சுவட்டைப் பின்பற்றித் தமிழிசை வளர்ச்சிக்குச் செய்துள்ள தொண்டு கல்லில் பொறித்த வாசகமாம் காலத்திற்கும் அழியாது.

அண்ணாமலை என்றாலே திருவண்ணாமலை ஞாபகத்திற்கு வருகிறதோ இல்லையோ தமிழிசை நினைவிற்கு வராமல் போகாது. அந்த வகையில் முன்னோர்களின் செம்மையான இசை மேம்பாட்டுப் பணிகளில் எம்.ஏ.எம்.இராமசாமி அவர்களும், அக்கறை காட்டி வருகிறார்கள். தமிழிசைக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு அறக்கட்டளை நிதியிலிருந்து உதவித் தொகை வழங்கி இசையாலும் மாணவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். தம் தந்தையார் மதுரையில் நிறுவிய தமிழிசைச் சங்கத்தினைக் கொண்டு தென் தமிழகத்திலும் இசை வளர்த்து வருகிறார். இசைக்கலைக்கும் கலைஞர்களுக்கும் நல்லதொரு புரவலராகத் திகழ்கிறார். இவரின் வழிகாட்டலில் இயங்கி வரும் இராணி சீதை மன்றம் கலை நிகழ்ச்சிகளுக்கு சலுகைகள் அளித்து வருகிறது. இவர் தந்தையார் வழியில் தமது கல்விப் பணியினையும், அறப்பணிகளையும், தமிழிசைப் பணியினையும், பல்கலைக்கழக நிர்வாகத்தையும் திறம்படச் செயல்படுத்தி வரும் மாமனிதராவார்.

நன்றி
முனைவர் இரா.மாதவி
உதவிப் பேராசிரியர்
இசைத்துறை

நாகஸ்வர வித்வான் கே.என்.எம்.பொன்னுசாமி பிள்ளை


மதுரை கே.என்.எம்.பொன்னுசாமி பிள்ளை


மங்கல இசை வளர்த்த மாமேதைகள் பலர். இவர்கள் ஆலயம் வளர்த்த அருங்கலை வாணர்களாக விளங்கினர். இவர்களுள் மதுரை பொன்னுசாமி பிள்ளையும் (1877 - 1929) ஒருவராவர். தமிழ்நாட்டின் மங்கல இசைக் கருவியாக நாகசுரம் விளங்குகிறது. இக்கருவி இசைப்பவர்களை நாயனக்காரர் என்று அழைப்பர். இவ்வகையில் இவரை மதுரையார் என்றும், பொன்னுசாமி நாயனக்காரர் என்றும் இவரை அழைப்பர்.
மதுரை பொன்னுசாமி பிள்ளையின் மூதாதையர் திருமங்கலத்தைச் சார்ந்தவர்கள் ஆவர். இவரது மூதாதையர்கள் நாயக்க மன்னர்களின் அவைக் கலைஞர்களாகத் திகழ்ந்துள்ளார். அவர்களில் ஒருவரான திருவேங்கடம் பிள்ளையின் கொள்ளுப் பேரனான முத்துக் கருப்பப் பிள்ளையின் நாதசுவர நிகழ்ச்சியைக் கேட்டு, எட்வர்டு மன்னர் அவருக்கு நூறு வெள்ளி நாணயங்களைப் பரிசாகத் தந்துள்ளார். இவ்வாறு பல பெருமைகள் அடங்கிய இசை மரபைச் சார்ந்த குடும்பத்தில் பிறந்தார். இவர்கள் மதுரையில் குடியேறிய பின்பு மதுரையார் குடும்பம் என்று அழைக்கப்பட்டனர்.


எம்.கே.எம் பொன்னுசாமி பிள்ளை
பிறப்பும் இளமையும்:

பொன்னுசாமி பிள்ளை மதுரைக்கு அருகிலுள்ள திருமங்கலம் என்ற ஊரில் முத்துக் கருப்பப் பிள்ளைக்கும், அலமேலு அம்மாளுக்கும் கி.பி.1877 ஆம் ஆண்டு நான்காவது குழந்தையாகப் பிறந்தார். இவருக்கு அய்யா சுவாமி பிள்ளை, சின்னசாமி பிள்ளை, செல்லையா பிள்ளை ஆகிய சகோதரர்கள் இருந்தனர்.

இசைப்பயிற்சி:

மரபு வழியில் வந்த நாகசுரக் கலையைப் பொன்னுசாமி பிள்ளை முதலில் தன் தந்தையிடமும் பின்னர் மதுரையில் மிகப்பெரும் புகழோடு விளங்கிய அவரது உறவினரான சௌந்தர பாண்டிய நாகசுரக்காரரிடமும் பயின்றார். மேற்பயிற்சிக்குக் கும்பகோணம் பெரியத்தெரு சுப்பிரமணிய பிள்ளையின் சித்தப்பாவான நாராயண நாகசுரக்காரரிடமும் பயிற்சிப் பெற்றார். மதுரையில் நாகதசுரப் பயிற்சிப் பெற்ற காலத்திலேயே எட்டையபுரம் இராமசந்திர பாகவதரிடம் வாய்ப்பாட்டும், வீணையும் கற்றார்.

திருமண வாழ்க்கை:

பொன்னுசாமி பிள்ளை மாரியம்மாள் என்ற பெண்மணியை மனைவியாகப் பெற்றார். இவர்களுக்கு நடேச பிள்ளை, சண்முகம் பிள்ளை என்ற இரு பிள்ளைகள் பிறந்தனர்.

நாகசுரக் கச்சேரிகளும், பெற்ற பாராட்டுகளும்:

பொன்னுசாமி பிள்ளை 1895 ஆம் ஆண்டு இராமநாதபுரம் சேதுபதி மன்னரின் அவையில் வாசித்த பொழுது இவரது வாசிப்பைக் கேட்ட வித்வானான உறையூர் முத்துவீரு சுவாமி நாகசுரக்காரர் இவரை மிகவும் பாராட்டினார்.
இவர் ஒரு சமயம் வீணை தனம்மாள் முன் இராமநாதபுரத்தில் வீணைக் கச்சேரி செய்தார். அக்கச்சேரியினைக் கேட்ட வீணை தனம்மாள் “நாதசுரத்தில் சக்கைப் போடு போடுகிறீர்கள் என்றால் என்னுடைய வாத்தியத்திலும் இத்தனை தேர்ச்சியோடு வாசிக்கிறீர்களே….. நீங்கள் நாகசுர வித்வானாக இருப்பதனால் சொல்லுங்கள், வீணை வாசிப்பதாக முடிவு செய்தீர்களேயானால் நாங்கள் வீணையை விட்டுவிடுவதைத் தவிர வேறுவழி இருக்காது” என்றார். இதன் மூலம் இவரின் வீணை வாசிக்கும் முறையும் புலப்படுகின்றது.
1916 ஆம் ஆண்டில் மைசூர் அரசர் சாமராஜ உடையார் இராமேசுவரத்திற்கு வந்தார். அவரை வரவேற்கும் இசைக்குழுவில் இவரின் மங்கல நிகழ்ச்சி இடம் பெற்றது. இவரின் இசையைக் கேட்ட மைசூர் அரசர் இவரை தனது அரசவைக் கலைஞராக்கி கௌரவித்தார். இவர் தனது நாகசுர இசைக் கச்சேரியை ஏராளமான இசைத்தட்டுகள் மூலம் இவ்வுலகிற்கு தந்துள்ளார்.

தனிச்சிறப்புகள்:

இசையுலகில் வெங்கடமகியவர்களால் தோற்றுவிக்கப்பட்ட 72 மேளகர்த்தா முறையை மறுத்து அதில் 32 மேளமே உண்மை என்று கூறியுள்ளார். தனது இசை அனுபவத்தின் வாயிலாகக் கண்டறிந்த சான்றுகளைத் தொகுத்து “பூர்வீக சங்கீத உண்மை” என்ற பெயரில் அரிய நூலைத் தந்துள்ளார்.
இராகங்களைப் பாடி ஆலாபனை செய்வோரும், இசைக்கருவி வல்லுநர்களும் சட்ஜ சுருதியில் இசைப்பது வழக்கம். ஒரு சிலர் மத்திமத்தை சட்ஜமாக வைத்துக் கொண்டு ஆலாபனைச் செய்வர். ஆனால் இதில் தனிச்சிறப்பாக பொன்னுசாமி பிள்ளை அவர்கள் ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் சுவரங்களை வைத்து வாசிக்கும் திறமைப் பெற்றிருந்தார். இம்முறையில் வாசிப்பது பழங்காலத்திலிருந்து இன்று வரை இவர் ஒருவர் மட்டுமே வாசித்து சாதனைப் படைத்துள்ளார் என்பதும் சிறப்பான தொன்றாகும். இவர் நாகசுரம் மட்டுமல்லாமல் வாய்ப்பாட்டு, வீணையிலும் சிறந்த தேர்ச்சிப் பெற்றிருந்தார்.
நாகசுர இசை உலகில் முடிசூடா மன்னனாகவும், மைசூர், இராமநாதபுரம் அரசவைக் கலைஞராகவும் இருந்த மதுரை பொன்னுசாமி பிள்ளை 1904 ஆம் ஆண்டு தான் வசித்து வந்த தெருவில் “சங்கீத ரத்ன விநாயகர்” ஆலயம் கட்டினார். தலை சிறந்த நாதசுவர மேதையான பொன்னுசாமி பிள்ளை 27.11.1929 அன்று காலமானார். இவரின் மகன் மதுரை நடேச பிள்ளையின் மகன்களான கலைமாமணி எம்.கே.என்.சேதுராமன், பொன்னுசாமி பிள்ளை சகோதரர்கள் தற்காலத்தில் புகழ் மிக்க நாதசுவரக் கலைஞர்களாகத் திகழ்ந்துள்ளனர். இவர்களில் மதுரை சேதுராமன் அவர்கள் காலமானார். இவர்கள் இந்திய அரசின் பத்மஸ்ரீ கலைமாமணி போன்ற பல விருதினைப் பெற்றுள்ளனர். மதுரை பொன்னுசாமி பிள்ளை மிகச்சிறந்த நாகசுரக் கலைஞராக வாழ்ந்து வருகிறார். தேனினும் இனிமையான நாகசுர இசையை வாழையடி வாழையாக மதுரையின் மரபினர் வளர்ந்து வருகின்றனர்.

நன்றி
முனைவர் செ.கற்பகம்
உதவிப் பேராசிரியர்
இசைத்துறை

Wednesday, September 9, 2015

மல்லாரி-MALLARI

மல்லாரி
மங்கல இசைக் குழுவிற்கு உரிய இசை உருப்படியாக மல்லாரி அமைந்துள்ளது.. இலயக் கருவியான தவிலின் பங்கு இதில் மிகுதி. இறைவன் வீதி உலா எழுந்தருளும் பொழுது கம்பீரநாட்டை இராகத்தில் வீரச் சுவை நிரம்பிய இசை உருப்படியான மல்லாரியை இசைப்பர். இது போல ஆலயச் செயற்பாட்டின் சில நிலையிலும் அந்நிகழ்வுகேற்ப மல்லாரி இசைக்கப்படுவதுண்டு. மல்லாரி வடிவத்திற்கு சாகித்யம் கிடையாது. சாகித்யம் பகுதி தவில் சொற்கட்டுகள் என்னும் தத்தகாரமாக அமைந்து காணப்படும்.இவ் வடிவம் மத்திம காலம் ,துரித காலம் 'விளம்ப காலம், திஸ்ரம் என்னும் நான்கு நிலையை கொண்டது.
மல்லாரி வகைகள்:
*சின்ன மல்லாரி-
சாதரணமாக புறப்பாடு தொடங்கியது இசைக்ப்படும் இம் மல்லாரி மல்லாரி அல்லது சின்ன மல்லாரி எனப்படும்
*தீர்த்த மல்லாரி-
இறைவனின் நீராடலுக்கு நீர் கொண்டு வருவதனைத் திருமஞ்சனம் என்பர். திருமஞ்சன நீர் கொண்டு வரும் பொழுது தீர்த்த மல்லாரி இசைக்கப்படும்.
*தளிகை மல்லாரி-
இறைவனின் தளிகை உணவு தயாரிக்கும் இடமான மடைப்பள்ளியிலிருந்து தளிகை கொண்டு வரப்படும். அப்பொழுது தளிகை மல்லாரி இசைக்கப்படும்.
*திரிபுடைதாள மல்லாரி-
திருவிழா காலங்களில் நடவாண பந்தல் தாண்டியதும் இது இசைக்கப்படும்
*பெரிய மல்லாரி-
சைவ ஆலயங்களில் காளை வாகனத்தின் போது இம் மல்லாரி இசைக்கப்படும்
*தேர் மல்லாரி-
ஆலயத் திருவிழாக் காலங்களில் இறைவனைத் தேரில் எழுந்தருளச் செய்தல் உண்டு. இது பெரும்பாலும் ஆலயப் பெருந்திருவிழாவான ஒன்பதாம் நாள் நடைபெறும். தொண்டர்கள் தேரின் வடம் பிடித்துத் தேரை இழுப்பர். இவர்களை உற்சாகப்படுத்தும் நிலையில் தேர் மல்லாரி இடம் பெறும்.
*பள்ளியறை மல்லாரி-
சுவாமி பள்ளியறைக்கு செல்லும் போது பள்ளியறை மல்லாரி இசைக்கப்படும்

*படி மல்லாரி -
சில ஆலயங்களில் சுவாமி புறப்பாடு தொடக்கத்தில் படிகளில் இறங்கி வரும் சூழல் அமைந்தது காணப்படும்.இச் சூழலில் படி மல்லாரி இசைக்கப்படும்
*பூர்ண கும்ப மல்லாரி-
சுவாமிக்கு சிறப்பு நிகழ்வுகள் நடைபெறும் வேளையில் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு மரியாதை செய்யும் நிகழ்வின் போது இம் மல்லாரி இசைக்கப்படும்

ஒத்து-othhu

* ஒத்து  *
பழங்காலத்தில் சுருதிக்கு பதில் ஒத்து என்ற இசை கருவி மங்கல இசை குழுவில் இடம் பெறும் இது தற்காலத்தில் மறைந்து விட்டது. ஒத்து என்பது நாகஸ்வர போன்ற வடிவத்தை பெற்றிருக்கும். எனினும் இதில் சப்த சுவரங்களை எழுப்ப முடியாது மாறாக
ஆதார சுவரமான சட்ஜமம் மட்டுமே இசைக்க முடியும். சுருதியின் அளவு ஒத்து கருவியினை தயாரிக்கும் பொழுதே நிர்ணயிக்க பட்டுவிடுகிறது. ஒத்து கருவியை இசைப்பவர் ஒய்வு இல்லாமல் தொடர்ந்து காற்றை செலுத்தி கொண்டே இருக்க வேண்டும் இது சாதாரண காரியம் அல்ல மிகவும் கடினமான ஒன்று.இதனை நாம் சாதரணமாக பலூன் ஒன்றினை ஊதும் பொழுதே அறிய முடியும்.
இப்போது ஒத்து மூச்சு என்றால் என்னவென்று அறிவோம். ..
பழங்காலத்தில் நாகஸ்வரம் இசைத்தவர்கள் நாகஸ்வரம் இசைக்கும் பொழுது தொடர்ந்து வாய் எடுக்காமல் சீவாளியில் வாய் வைத்தபடி இசைத்துள்ளனர்.இதற்கு பெயரே ஒத்து மூச்சு என்று பெயர்.

Sunday, September 6, 2015

Muthuswami Dikshitar Kritis - Alphabetical List


Dikshitar Kritis - Alphabetical List

abhayAmbA jagadambA-kalyANi 
abhayAmbA nAyaka hari sAyaka-Ananda bhairavi 
abhayAmbA nAyaka vara dAyaka-kEdAra gauLa 
abhayAmbAM bhaktiM-sahAna 
abhayAmbikAyAH anyaM-kEdAra gauLa 
abhayAmbikAyai aSva-yadukula kAmbhOji 
abhirAmIM akhila-bhUshAvati 
agastISvaraM-lalitA 
akhilANDESvari raksha mAM-jujAvanti 
akhilANDESvarO rakshatu-Suddha sAvEri
akhilANDESvaryai namastE-Arabhi 
akshaya linga vibhO-SankarAbharaNaM 
amba nIlAyatAkshi-nIlAmbari 
ambikAyAH abhayAmbikAyAH-kEdAraM 
ananta bAla kRshNa-ISa manOhari 
angArakaM ASrayAmyahaM-suraTi 
annapUrNE viSAlAkshi-sAma 
ardha nArISvaraM-kumudakriyA 
aruNAcala nAthaM-sAranga 
avyAja karuNA-sAlanga nATa 

Adi purISvaraM-Arabhi 
Ananda naTana prakASaM-kEdAraM 
AnandAmRtAkarshiNi-amRta varshiNi 
AnandESvarENa-Ananda bhairavi 
AnjanEyaM-SankarAbharaNaM 
AryAM abhayAmbAM-bhairavi 

B
bAla gOpAla-bhairavi 
bAla kRshNaM bhAvayAmi-gOpikA vasantaM 
bAla kucAmbikE-suraTi 
bAla subrahmaNyaM-suraTi 
bAlAmbikayA kaTAkshitOhaM-SrI ranjani
bAlAmbikAyAH paraM-kAnaDa 
bAlAmbikAyAH tava-kEdAra gauLa 
bAlAmbikAyai namastE-nATa kuranji 
bAlAmbikE pAhi-manO ranjani 

bRhadambA madambA-bhAnumati 
bRhadISa kaTAkshENa-jIvantikA 
bRhadISvaraM bhaja-nAga dhvani 
bRhadISvarAya namastE-SankaraAbharaNaM 
bRhadISvarIM bhaja-lalita pancamaM 
bRhadISvarO rakshatu-gAna sAma varALi 
bRhambikAyai-vasanta 
bRhannAyaki vara dAyaki-AndhALi 
bRhaspatE tArA patE-aThANa 

brahma vidyAmbikE-kalyANi 
budhamASrayAmi-nATa kuranji 

bhajarE rE citta-kalyANi 
bhakta vatsalaM-vaMSavati 
bhArati-dEva manOhari 
bhOgacchAyA-bhOgacchAyAnATa 
bhUshA patiM-bhUshAvati 
bhUshAvatiM-bhUshAvati 

C
candra SEkharaM-mArga hindOLaM 
candraM bhaja-asAvEri 

cEtaH SrI bAla kRshNaM-jujAvanti 

cidambara naTarAja mUrtiM-tanukIrti 
cidambara naTarAjaM-kEdAraM 
cidambarESvaraM-dhuni bhinna shaDjaM 
cintaya citta-SankarAbharaNam 
cintaya mA kanda-bhairavi 
cintayE mahA linga-paraju 
cintayEhaM sadA-SankarAbharaNaM 

chAyAvatIM-chAyAvati 

D
dakshiNA mUrtE-SankarAbharaNaM 
daNDa nAthAya-khamAs 
daNDAyudha pANiM-Ananda bhairavi 

dAkshAyaNi-tODi 
dASarathE-SankarAbharaNaM 

dEvi jagadISvari-bhairavi 

divAkara tanujaM-yadukula kAmbhOji 
dIna bandhO-SankarAbharaNaM 

dharma samvardhani-madhyamAvati 

E
Ehi annapUrNE-punnAga varALi 
Eka dantaM bhajEhaM-bilahari 
EkAmra nAthaM bhajEhaM-gamaka kriyA
EkAmra nAthAya namastE-mukhAri 
EkAmra nAthAya-vIra vasantaM 
EkAmra nAthESvarENa-caturangiNi 
EkAmrESa nAyakIM-cAmaraM 
EkAmrESa nAyikE-Suddha sAvEri 

G
gajAdISAdanyaM-nATa kuranji 
gajAmbA nAyakO-janjauTi 
gajAnana yutaM-vEgavAhini 
gangE mAM pAhi-janjauTi 

gaNa nAyakaM-rudra priya 
gaNa patE mahA matE-kalyANi 
gaNa rAjEna-Arabhi 
gaNESa kumAra-janjauTi 

gAna lOlE-nAga varALi 

gauri giri rAja-gauri 
gaurISAya-Arabhi 

girijayA ajayA-SankarAbharaNaM 
gIti cakra ratha-kannaDa 

gOkarNESvara-saurAshTraM 
gOpAla kRshNAya-kAmbhOji 
gOvardhana girISaM-hindOLaM 
gOvinda rAjaM-mukhAri 
gOvinda rAjAya-suraTi 
gOvinda rAjEna-mEca bauLi 

guNi janAdi nujta-gurjari 
guru guha bhava-caturangiNi 
guru guha pada-SankarAbharaNaM 
guru guha sarasija-SankarAbharaNaM 
guru guha svAmini-bhAnumati 
guru guhAdanyaM-balahaMsa 
guru guhAya bhakta-sAma 
guru mUrtE bahu-SankarAbharaNaM 

H
hari hara putraM-vasanta 
hari yuvatIM-dESi siMhAravaM 
hasti vadanAya-navarOj 

hAlAsya nAthaM-darbAr 
hATakESvara-bilahari 
hE mAyE-SankarAbharaNam 

hErambAya-aThANa 

hima giri kumAri ISa Priya-amRta varshiNi 
hima giri kumAri ISvari-ravikriyA 
himAcala kumArIM-jhankAra bhramari 
hiraNmayIM lakshmIM-lalitA 

I
ISAnAdi SivAkAra-sahAna 

J
jagadISa guru guha-SankarAbharaNaM 
jagadISa manOhari-ISa manOhari 
jambU patE-yamunA kalyANi 
jayati SivA-bhavANi 

jnAna prasUnAmbikE-kalyANi 
jnAnAmbikE-sAnAgraNi 

K
kailAsa nAthaM-vEgavAhini 
kailAsa nAthEna-kAmbhOji 
kalAvati kamalAsana-kalAvati 
kamalAmbA saMrakshatu-Ananda bhairavi 
kamalAmbAM bhajarE-kalyANi 
kamalAmbikAyai kanaka-kAmbhOji 
kamalAmbikAyAstava-punnAga varALi 
kamalAmbikE ASrita-tODi 
kamalAsana vandita-SankarAbharaNaM 
kanaka sabhA patiM-mALava SrI 
kanakAmbari kAruNya-kanakAmbari 
kanja daLAyatAkshi-manOhari 
kari kaLabha-sAvEri 
kaumAri gauri-gauri vAlAvali 

kAdambarI priyAyai-mOhanaM 
kAla bhairavaM-bhairavaM 
kAma kOTi pITha-saugandhini 
kAmAkshi kAma kOTi-sumadyuti 
kAmAkshi mAM pAhi-Suddha dESi 
kAmAkshi vara lakshmi-bilahari 
kAmAkshIM kalyANIM-kalyANi 
kAmESvarENa-SrI rAgaM 
kAncISaM-SankarAbharaNaM 
kASi viSAlAkshIM-gamaka kriya 
kASi viSvESvara-kAmbhOji 
kAyArOhaNESaM-dEva gAndhAraM 

kOdaNDa rAmaM-kOkilAravaM 

kRshNAnanda-gauLipantu 

kshitijA ramaNaM-dEva gAndhAri 

kumAra svAminaM-asAvEri 
kumbhESvarAya namastE-kalyANi 
kumbhESvarAya namastE-kEdAraM 
kumbhESvarENa-kalyANi 
kusumAkara SObhita-kusumAkaraM 
kusumAkara vimAna-Ahiri 

L
lalitA paramESvari-suraTi 
lalitAmbikAM-dEvakriya 
lalitAmbikAyai-bhairavi 
lambOdarAya-varALi 

M
madhurAmbA jayati-paraju 
madhurAmbA saMrakshatu-dEva kriya 
madhurAmbAM bhaja-stava rAjaM 
madhurAmbAyAstava-bEgaDa 
madhurAmbikAyAM-dESi siMhAravaM 
mahA dEvEna-dEva manOhari 
mahA gaNa patE-naTa nArAyaNi 
mahA gaNa patiM manasA-nATa 
mahA gaNa patiM vandE-tODi 
mahA lakshmi karuNa-mAdhava manOhari 
mahA lingESvaraM-paraju 
mahA lingESvarAya-aThANa 
mahA suraM kEtuM-cAmaraM 
mahA tripura sundari-madhyamAvati 
mahishAsura mardini-gauLa 
mahishAsura mardinIM-nArAyaNi 
mangaLa dEvatayA-dhanyASi 
mangaLa dEvatE-mArga dESi 
mangaLaM jaya-vasanta 
mangaLAmbAyai-mALava SrI 
marakata lingaM-vasanta 
marakata vallIM-kAmbhOji 
matsyAvatAra-binna pancamaM 

mAdhavO mAM pAtu-rAga mAlikA 
mAmava mInAkshi-varALi 
mAmava paTTAbhirAma-maNirangu 
mAmava raghuvIra-mAhuri 
mAnasa guru guha-Ananda bhairavi 
mAra kOTi kOTi-Arabhi 
mAra rati priyaM-rati priya 
mArga hindOLa-mArga hindOLaM 
mArga sahAyESvaraM-kASi rAmakriya 
mAruvakAdi mAlini-mAruva 
mAtangi marakatAngi-dhauta pancamaM
mAtangi Sri-ramA manOhari 
mAyE citkalE-SankarAbharaNaM 
mAyE tvaM yAhi-tarangiNI 
mAyUra nAthaM-dhanyASi 

mInAkshi mE mudaM-gamaka kriya 

mOhana nATa-mOhana nATa 

mucukunda varada-SankarAbharaNaM 
mura harENa-Suddha mukhAri 

N
nabhO maNi-nabhO maNi 
namastE para dEvatE-dEvaranji 
namO namastE gIrvANi-gIrvANi 
nanda gOpAla-yamunA kalyANi 
nara harim-jaya Suddha mALavi 
narasiMhAgaccha-mOhanaM 
narmadA kAvEri-nAma dESi 
nava ratna mAlinIM-gamaka kriyA 
nava ratna vilAsa-nava ratna vilAsaM 

nAga gAndhAri-nAga gAndhAri 
nAga lingaM bhajEhaM-SankarAbharaNaM 
nAga lingaM namAmi-mOhanaM 
nAgAbharaNaM-nAgAbharaNaM 

nishadhAdi-nishada 
nI sATi daivamendu-SrI ranjani 
nIla kaNTa mahA dEva-vasanta 
nIla kaNThaM bhajEhaM-kEdAra gauLa 
nIla kaNThAya namO-nAda rAmakriya 
nIlAcala nAthaM-sumadyuti 
nIlAngaM hariM-nIlAmbari 
nIlOtpalAmbA jayati-nArAyaNa gauLa 
nIlOtpalAmbAM bhajarE-nArI rItigauLa 
nIlOtpalAmbikayA nirvANa-kannaDa gauLa 
nIlOtpalAmbikAyAH paraM-gauLa 
nIlOtpalAmbikAyai namastE-kEdAra gauLa 
nIlOtpalAmbikAyAM bhaktiM-pUrva gauLa 
nIlOtpalAmbikAyAstava-mAyA mALava gauLa 
nIlOtpalAmbikE nitya-chAyA gauLa 
nIrajAkshi kAmAkshi-hindOLaM 

P
panca bhUta kiraNAvaLIM-kiraNAvaLi 
panca mAtanga mukha-malahari 
pancASatpITha rUpiNi-dEva gAndhAraM 
pankaja mukha-SankaraAbharaNaM 
pannaga Sayana-madhyamAvati 
para dEvatA bRhatkucAmbA-dhanyASi 
para dEvatE bhakta pUjitE-huSani 
para dEvatE bhava-SankarAbharaNaM 
para dEvatE namastE-Ananda bhairavi 
parA Sakti ISvari-gauri vElAvali 
parA SaktiM-rudra priya 
parama SivAtmajaM-yamunA kalyANi 
paramESvara jagadISvara-cala nATa 
paramESvarEna-pUrva varALi 
parandhAmavatI-dhAmavati 
paranjyOtishmatI-jyOti 
parimaLa ranga nAthaM1-hamIrkalyANi 
parimaLa ranga nAthaM2-hamIrkalyANi 
parvata rAja kumAri-SrI ranjani 
parvata vardhani-sAma 
paSupatISvaraM-Siva pantuvarALi 
pavanAtmajAgaccha-cala nATa 
pavanAtmajaM-SankarAbharaNaM 

pAhi durgE-SankarAbharaNaM 
pAhi mAM janakI vallabha-SankarAbharaNaM 
pAhi mAM pArvati paramESvari-mOhanaM 
pAhi mAM ratnAcala nAyaka-mukhAri 
pAlaya mAM bRhadISvara-nAyaki 
pAlaya mAM bRhadISvari-tODi 
pAlaya mAM paramESvari-tarangiNi 
pAlaya mAM pArvatISa-kannaDa 
pAmara jana pAlini-sumadyuti 
pArvatI kumAraM-nATa kuranji 
pArvatI patE-SankarAbharaNaM 
pArvatI patiM-haMsa dhvani 
pArvatISvarENa-bhUshAvati 

pIta varNaM-SankarAbharaNaM 

praNatArti haraM-nAyaki 
praNatArti harAya-sAmanta 
prasanna vEnkaTESvaraM-vATI vasanta bhairavi 
pratyangirA-nAda rAmakriya 

pura hara nandana-hamIr kalyANi 
pUrNa candra bimba-rAga mAlikA 

R
rakta gaNa patiM-mOhanaM 
ranga nAyakaM-nAyaki 
ranga pura vihAra-bRndAvana sAranga 

rAja gOpAlaM-mOhanaM 
rAja rAjEndra-guNDakriya 
rAjIva lOcanaM-SankarAbharaNaM 
rAma candra bhaktaM-gEya hejjajji 
rAma candrAdanyaM-dhanyASi 
rAma candraM bhAvayAMi-vasanta 
rAma candraM rAjIvAkshaM-SankarAbharaNaM 
rAma candrasya dAsOhaM-dhAmavati 
rAma candrAya namastE-tODi 
rAma candrEna saMrakshitOhaM-mAnji 
rAma janArdana-SankarAbharaNaM 
rAma kRshNEna-sahAna 
rAma nAthaM bhajEhaM-kASi rAmakriya 
rAma rAma kali-rAmakali 
rAmE bharata-jyOti 

rENukA dEvi-kannaDa bangALa 

rudra kOpa jAta-rudra priya 

s
saccidAnanda maya-kumbhini 
sadA vinata sAdarE-rEvagupti 
sadAcalESvaraM-bhUpALaM 
sadASiva jAyE-SankarAbharaNaM 
sadASivaM upAsmahE-SankarAbharaNaM 
sadASivEna-sindhu rAmakriyA 
sadASrayE abhayAmbikE-cAmaraM 
saindhavi rAga priyE-saindhavi 
sakala sura vinuta-SankarAbharaNaM 
sandhyA dEvIM-dEva kriyA 
santAna gOpAla kRshNaM-khamAs 
santAna manjari-santAna manjari 
santAna rAma svAminaM-hindOla vasantaM 
santAna saubhAgya-SankarAbharaNaM 
santataM gOvinda rAjaM-SankarAbharaNaM 
santataM pAhi mAM-SankarAbharaNaM 
sarasa sauvIra-sauvIraM 
sarasija nAbha sOdari-nAga gAndhAri 
sarasvati chAyA tarangiNi-chAyA tarangiNi 
sarasvati manOhari-sarasvati manOhari 
sarasvati vidhi yuvati-hindOLaM 
sarasvatyA bhagavatyA-chAyA gauLa 
saundara rAjaM-bRndAvani 
saura sEnESaM-saura sEna 

sAdhu jana citta-pUrNa pancamaM 
sAdhu jana vinutiM-gIta priyA 
sAma gAna priyE-SankarAbharaNaM 
sAmba sadASivAya-kAmbhOji 
sAranga rAga priyE-sAranga 
sArasa daLa nayana-khamAs 
sEnA patE-kASi rAmakriyA 

siddhISvarAya-nIlAmbari 
siddhi vinAyakaM-cAmaraM 
siMhAsana sthitE-rAga mAlikA 

smarAmyahaM sadA-rAma manOhari 

sOma sundarESvaraM-Suddha vasataM 
sOmAskandaM-SankarAbharaNaM 

stava rAjAdi-stava rAjaM 

subrahmaNyaM-SankarAbharaNaM 
subrahmaNyEna-Suddha dhanyASi 
sundara mUrtim-Takka 
sundarESvarAya-SankarAbharaNaM 

sUrya mUrtE-saurAshTraM 

svAmi nAtha-cala nATa 
svAmi nAthEna-bRndAvani 

shaDAnanE-khamAs 

S
Saila rAja kumAri-Saila dESAkshi 
SailESvaraM-sumadyuti 
Sakti sahita-SankarAbharaNaM 
Sankara nArAyaNaM-nArAyaNa dESAkshi 
Sankara vara-SankarAbharaNaM 
SankaraM abhirAmI-manOhari 
Sankha cakra gadA-pUrNa candrika 
SaravaNa bhava-rEvagupti 
SarAvatI taTa-SarAvatI 
Sauri vidhi nutE-SankarAbharaNaM 

SAlivATISvaraM-dEva gAndhAri 

SEshAcala nAyakaM-varALi 

Siva kAmESvaraM-Arabhi 
Siva kAmESvarIM-kalyANi 
Siva kAMI patiM-nATa kuranji 
Siva kAyArOhaNESAya-rudra priya 

SrI abhayAmbA-SrI rAgaM 
SrI bAlasubrahmaNya-bilahari 
SrI bhArgavi-mangaLa kaiSiki 
SrI dakshiNA mUrtiM sadA-aThANa 
SrI dakshiNA mUrtISaM-phEnadyuti 
SrI duM durgE-SrI ranjani 
SrI gaNa nAthaM-ISa manOhari 
SrI gaNESAtparaM-Ardra dESi 
SrI guru guha mUrtE-udaya ravicandrika 
SrI guru guha tArayASu-dEvakriya 
SrI guru guhasya-pUrvi 
SrI guruNA-pADi 

SrI kamalAmbA jayati-Ahiri 
SrI kamalAmbikayA kaTAkshitOhaM-SankarAbharaNaM 
SrI kamalAmbikAyAH paraM-bhairavi 
SrI kamalAmbikAyAM bhaktiM-sahAna 
SrI kamalAmbikE avAva-ghaNTA 
SrI kamalAmbikE SivE-SrI rAgaM 

SrI kALahastISa-huSani 
SrI kAntimatIM-dESi siMhAravaM 

SrI kRshNaM bhaja mAnasa-tODi 
SrI kRshNaM bhajarE-rUpavati 
SrI kRshNO mAM-nAsAmaNi 

SrI lakshmI varAhaM-AbhOgi 

SrI madhurA puri vihAriNi-bilahari 
SrI madhurAmbikayA-aThANa 
SrI madhurAmbikE-kalyANi 
SrI mahA gaNa patiravatu-gauLa 
SrI mahArAjnI-karNATaka kApi 
SrI mangaLAmbikAM-ghaNTa 
SrI mangaLAmbikE-kalyANi 
SrI mAtaH Siva-bEgaDa 
SrI mAtR bhUtaM-kannaDa 
SrI mInAkshi gauri-gauri 
SrI mInAmbikAyAH-dEva gAndhAri 
SrI mUlAdhAra cakra-SrI rAgaM 

SrI nAtha sOdarIM-nabhOmaNi 
SrI nAthAdi guru guhO-mAyA mALavagauLa 
SrI nIlOtpala nAyikE-nArI rItigauLa 

SrI pArtha sArathinA-Suddha dhanyASi 
SrI pArvatI paramESvarau-bauLi 

SrI ramA sarasvati-nAsAmaNi 
SrI ranga nAthAya-dhanyASi 

SrI rAja gOpAla-sAvEri 
SrI rAja rAjESvari-pUrNa candrika 
SrI rAja rAjESvarIM-madhyamAvati 
SrI rAma candrO-SrI ranjani 
SrI rAmaM ravi kula-nArAyaNa gauLa 

SrI sarasvati hitE-mAnji 
SrI sarasvati namOstu tE-Arabhi 
SrI satya nArAyaNaM-Siva pantuvarALi 

SrI sAmbaSivaM-bilahari 

SrI subrahmaNyAya-kAmbhOji 
SrI subrahmaNyO mAM-tODi 
SrI sugandhi kuntaLAmbikE-kuntaLaM 
SrI sundara rAjaM-kASi rAmakriya 

SrI svAmi nAthAyA-khamAs 

SrI Sukra bhagavantaM-paraju 
SrI SUlinIM-Saila dESAkshi 

SrI tyAgarAjasya-rudrapriya 
SrI vaidya nAthaM-aThANa 
SrI valmIka lingaM-kAmbhOji 
SrI vara lakshmi-SrI rAgaM 
SrI vaTuka nAtha-dEvakriya 

SrI vAncha nAthaM-suraTi 

SrI vEnkaTa girISaM-suraTi 
SrI vENu gOpAla-kuranji 
SrI vENu gOpAlaM bhaja-SankarAbharaNaM 

SrI vidyA rAja gOpAlaM-jaganmOhanaM 
SrI viSva nAthaM bhajEhaM-rAga mAlikA 

SRngAra rasa-rasa manjari 
SRngAra SaktyAyudha-ramA manOhari 
SRngArAdi nava-dhavaLAngaM 

SvEta gaNa patiM-rAga cUDAmaNi 
SvEtAraNyESvaraM-Arabhi 

SyAmaLAngi-SyAmaLaM 
SyAmaLE mInAkshi-SankarAbharaNaM 

T
tArakESvara-SankarAbharaNaM 
tiruvaTISvaraM-gamaka kriyA 

trilOcana mOhinIM-bhairavi 
tripura sundari namOstu tE-dEva manOhari 
tripura sundari Sankari-sAma 

tyAgarAja mahadhvaja-SrI rAgaM 
tyAgarAja pAlayASu-gauLa 
tyAgarAja yOga-Ananda bhairavi 
tyAgarAjAdanyaM-darbAr 
tyAgarAjaM bhajarE-yadukula kAmbhOji 
tyAgarAjaM bhajEhaM-nIlAmbari 
tyAgarAjAya namastE-bEgaDa 
tyAgarAjE kRtyAkRtyaM-sAranga 
tyAgarAjEna-sALaga bhairavi 
tyAgarAjO virAjatE-aThANa 
tyAgESaM bhajarE-rudra priya 

U
ucchishTa gaNapatau-kASi rAmakriya 

V
vadAnyESvaraM-dEva gAndhAri 
vallabhA nAyakasya-bEgaDa 
vaMSavati-vaMSavati 
vandE mInAkshi-SankarAbharaNaM 
vara lakshmIM bhaja-saurAshTraM 
vara Siva bAlaM-SankarAbharaNaM 
varada rAja avAva-gangA tarangiNi 
varada rAja pAhi-SankarAbharaNaM 
varada rAjamupAsmahE-sAranga 

vAgdEvi mAmava-SankarAbharaNaM 
vAmAnka sthitayA-aThANa 
vArAhIM-vEga vAhini 
vAsu dEvamupAsmahE-mALava pancamaM 
vAtApi gaNa patiM-haMsa dhvani 

vEda purISvaraM-dhanyASi 
vEdAraNyESvarAya-tODi 
vEnkaTAcala patE-karNATaka kApi 
vEnkaTESvara yAdava-mEgha ranjani 

vighnESvaraM-malahari 
viNAyaka vighna-vEga vAhini 
viSAlAkshIM-kASi rAmakriya 
viSva nAthaM bhajEhaM-naTAbharaNaM
viSva nAthEna-sAmanta 
viSvESvarO rakshatu-kAnaDa 

vINA bhEri-AbhEri 
vINA pustaka-vEgavAhini 
vIra hanumatE-karNATaka kApi 
vIra vasanta-vIra vasanta 

Saturday, September 5, 2015

Tyagaraja Kritis - Alphabetical list

Thyagaraja Krithis

Ada Modi Galada,Charukesi,Adi,Thyagaraja
Adaya Sri Raghuvara,Ahiri,Adi,Thyagaraja
Adi Kadu Bhajana,Yadukalakambhoji,Adi,Thyagaraja
Adigi Sukhamu,Madhyamavati,Rupaka,Thyagaraja
Adugu Varamula,Arabhi,Chapu,Thyagaraja
Alakalalla Lada,Madhyamavati,Rupaka,Thyagaraja
Amba Ninnu,Arabhi,Adi,Thyagaraja
Amma Dharma Samvardhani,Atana,Adi,Thyagaraja
Amma Ravamma,Kalyani,Jhampa,Thyagaraja
Ananda Sagara,Garudadhvani,Adi,Thyagaraja
Anandamanandamayenu,Bhairavi,Adi,Thyagaraja
Anathudanu Ganu,Jingla,Adi,Thyagaraja
Andundakane,Pantuvarali,Triputa,Thyagaraja
Anupama Gunambudhi,Atana,Jhampa,Thyagaraja
Anuragamu Leni,Saraswati,Rupaka,Thyagaraja
Anyayamu Seyakura,Kapi,Adi,Thyagaraja
Aparadhamula,Darbar,Jhampa,Thyagaraja
Aparadhamulanu,Vanavali,Adi,Thyagaraja
Appa Ramabhakti,Pantuvarali,Rupaka,Thyagaraja
Aragimpave,Todi,Rupaka,Thyagaraja
Atade Dhanyudura,Kapi,Chapu,Thyagaraja
Atta Balukadu,Atana,Adi,Thyagaraja
Atukaradani Palka,Manoranjani,Adi,Thyagaraja
Badalika Dira,Ritigowla,Adi,Thyagaraja
Bagayanayya,Chandrajyoti,Adi,Thyagaraja
Balamu Kulamu,Saveri,Rupaka,Thyagaraja
Bale Balendu Bhushani,Ritigowla,Adi,Thyagaraja
Bantu Riti,Hamsanadam,Adi,Thyagaraja
Bhajana Parula Kela,Surati,Rupaka,Thyagaraja
Bhajana Seya Rada,Atana,Rupaka,Thyagaraja
Bhajana Seyave,Kalyani,Rupaka,Thyagaraja
Bhajare Raghuveeram,Kalyani,Adi,Thyagaraja
Bhakti Biccha Miyyave,Sankarabharanam,Rupaka,Thyagaraja
Bhaktuni Charitramu,Begada,Adi,Thyagaraja
Bhavanuta,Mohanam,Adi,Thyagaraja
Bhavasannutha,Varali,Adi,Thyagaraja
Bhuvini Dasudane,Sri Ranjani,Adi,Thyagaraja
Brochuvarevare,Sri Ranjani,Adi,Thyagaraja
Brovabharama,Bahudari,Adi,Thyagaraja
Buddhi Radu,Sankarabharanam,Chapu,Thyagaraja
Chakkani Rajamargamu,Kharaharapriya,Adi,Thyagaraja
Chala Kallaladu,Arabhi,Adi,Thyagaraja
Chalamelara,Margahindolam,Adi,Thyagaraja
Challaga Nato,Vegavahini,Adi,Thyagaraja
Chani Toditeve,Harikambhoji,Adi,Thyagaraja
Chede Buddhi,Atana,Adi,Thyagaraja
Chelimini Jalajakshu,Yadukulakambhoji,Adi,Thyagaraja
Chentane Sada,Kuntalavarali,Adi,Thyagaraja
Chera Ravademira,Ritigowla,Adi,Thyagaraja
Chesinadella,Todi,Adi,Thyagaraja
Chetulara,Kharaharapriya,Adi,Thyagaraja
Chinna Nade Na,Kalanidhi,Adi,Thyagaraja
Chintistunnade,Mukhari,Adi,Thyagaraja
Chutamu Rare,Arabhi,Rupaka,Thyagaraja
Dachuko Valena,Todi,Jhampa,Thyagaraja
Dandamu Bettedanura,Balahamsa,Adi,Thyagaraja
Daridapuleka,Saveri,Adi,Thyagaraja
Darini Telusukonti,Suddhasaveri,Adi,Thyagaraja
Darsannamu Seya,Narayanagowla,Jhampa,Thyagaraja
Dasaratha Nandana,Asaveri,Adi,Thyagaraja
Dasarathi Ni Runamu,Todi,Adi,Thyagaraja
Daya Juchutakidi Velara,Ganavaridhi,Adi,Thyagaraja
Daya Rani Daya Rani,Mohanam,Adi,Thyagaraja
Daya Seyavayya,Yadukulakambhoji,Adi,Thyagaraja
Dayaleni Bradukemi,Nayaki,Jhampa,Thyagaraja
Dehi Tava Pada,Sahana,Adi,Thyagaraja
Deva Sritapastirtha,Madhyamavati,Triputa,Thyagaraja
Devadi Deva Sadasiva,Sindhunamakriya,Adi,Thyagaraja
Devi Sri Tulasamma,Mayamalava Gowla,Adi,Thyagaraja
Dharanu Ni Saridaivamu,Varali,Adi,Thyagaraja
Dharmatma,Kedara Gowla,Jhampa,Thyagaraja
Dhyaname Varamaina,Dhanyasi,Adi,Thyagaraja
Dinamani Vamsa,Harikambhoji,Adi,Thyagaraja
Dorakuna,Bilahari,Adi,Thyagaraja
Dudukugala,Gowla,Adi,Thyagaraja
Durmargachara,Ranjani,Rupaka,Thyagaraja
Dvaitamu Sukhama,Ritigowla,Adi,Thyagaraja
E Papamu,Atana,Triputa,Thyagaraja
E Ramuni Nammitino,Vakulabharanam,Triputa,Thyagaraja
E Tavunara,Kalyani,Adi,Thyagaraja
Edari Sancharintura,Kantamani,Adi,Thyagaraja
Edini Bahubala,Darbar,Adi,Thyagaraja
Eduta Nilichite,Sankarabharanam,Adi,Thyagaraja
Ehi Trijagadisa,Saranga,Chapu,Thyagaraja
Ela Deliyalero,Darbar,Chapu,Thyagaraja
Ela Nidaya,Atana,Adi,Thyagaraja
Elavataram,Mukhari,Adi,Thyagaraja
Emanatichchedavo,Sahana,Rupaka,Thyagaraja
Emani Mataditivo,Todi,Adi,Thyagaraja
Emani Pogadudura,Viravasantam,Adi,Thyagaraja
Emani Vegintune,Huseni,Adi,Thyagaraja
Emi Jesitenemi,Todi,Chapu,Thyagaraja
Emidova Balkuma,Saranga,Adi,Thyagaraja
Emineramu,Sankarabharanam,Adi,Thyagaraja
Emtanuchu,Yadukulakambhoji,Adi,Thyagaraja
Enati Nomu Phalamo,Bhairavi,Adi,Thyagaraja
Endaro Mahanubhavulu,Sri Ragam,Adi,Thyagaraja
Endu Kougalintura,Suddha Desi,Adi,Thyagaraja
Endudagi Nado,Todi,Chapu,Thyagaraja
Enduki Chalamu,Sankarabharanam,Triputa,Thyagaraja
Enduko Baga Teliyadu,Mohanam,Adi,Thyagaraja
Enduko Nimanasu,Kalyani,Adi,Thyagaraja
Enduku Dayaradura,Todi,Triputa,Thyagaraja
Enduku Nirdaya,Harikambhoji,Adi,Thyagaraja
Endundi Vedalitivo,Darbar,Triputa,Thyagaraja
Ennado Rakshinchite,Sowrashtra,Adi,Thyagaraja
Ennadu Jutuno,Kalavati,Adi,Thyagaraja
Ennaga Manasukurani,Nilambari,Adi,Thyagaraja
Ennallu Nitrova,Kapi,Chapu,Thyagaraja
Ennallu Tirigeti,Malavasri,Adi,Thyagaraja
Ennallu Urake,Pantuvarali,Chapu,Thyagaraja
Enta Bhagyamu,Saranga,Adi,Thyagaraja
Enta Vedukontu,Saraswati Manohari,Adi,Thyagaraja
Entamuddo,Bindumalini,Adi,Thyagaraja
Entani Ne,Mukhari,Rupaka,Thyagaraja
Entapapinaiti,Gowlipantu,Chapu,Thyagaraja
Entarani Tanakenta,Harikambhoji,Adi,Thyagaraja
Entha Nerchina Entha Juchina,Suddha Dhanyasi,Adi,Thyagaraja
Entuku Peddalavale,Sankarabharanam,Adi,Thyagaraja
Epaniko Janminchitinani,Asaveri,Adi,Thyagaraja
Etavuna Nerchitivo,Yadukulakambhoji,Adi,Thyagaraja
Eti Janmamidi,Varali,Chapu,Thyagaraja
Eti Yochanalu Jesetura,Kiranavali,Adi,Thyagaraja
Etla Dorakitivo,Vasanta,Adi,Thyagaraja
Etula Brotuvo,Chakravakam,Triputa,Thyagaraja
Etula Gapaduduvo,Ahiri,Triputa,Thyagaraja
Etulaina Bhakti,Sama,Chapu,Thyagaraja
Evaramadugudura,Kalyani,Rupaka,Thyagaraja
Evarani Nirnayimchirira,Devamritavarshini,Adi,Thyagaraja
Evarichchirira,Madhyamavati,Adi,Thyagaraja
Evariena Lera,Siddhasena,Adi,Thyagaraja
Evarikai Avataram,Devamanohari,Chapu,Thyagaraja
Evarimata,Kambhoji,Adi,Thyagaraja
Evarito Nedelpudu,Manavati,Adi,Thyagaraja
Evaru Teliya Boyyeru,Todi,Rupaka,Thyagaraja
Evaru Teliyanu,Punnagavarali,Chapu,Thyagaraja
Evarura Ninuvina,Mohanam,Chapu,Thyagaraja
Evidhamulanaina,Sankarabharanam,Adi,Thyagaraja
Evvare Ramayya,Gangeyabhushani,Adi,Thyagaraja
Garavimpa Rada,Ghanta,Rupaka,Thyagaraja
Gati Nivani,Todi,Adi,Thyagaraja
Gattiganu Nanu Chai,Begada,Rupaka,Thyagaraja
Giripai Nelakonna,Sahana,Adi,Thyagaraja
Giriraja Suta,Bangala,Adi,Thyagaraja
Gitarthamu,Surati,Adi,Thyagaraja
Grahabalamemi,Revagupti,Adi,Thyagaraja
Guruleka,Gowri Manohari,Jhampa,Thyagaraja
Hari Yanuvani,Todi,Adi,Thyagaraja
Haridasulu Vedalu,Yamuna Kalyani,Adi,Thyagaraja
Hechcharikaga,Yadukulakambhoji,Jhampa,Thyagaraja
I Vasudha,Sahana,Adi,Thyagaraja
Ide Bhagyamu,Kannada,Triputa,Thyagaraja
Idi Samayamura,Chaya Nata,Adi,Thyagaraja
Idiniku Mera Gadura,Punnagavarali,Adi,Thyagaraja
Ika Gavalasina Demi,Balahamsa,Adi,Thyagaraja
Ilalo Pranatarti,Atana,Adi,Thyagaraja
Imemenu Galginanduku,Varali,Adi,Thyagaraja
Induka Buttinchitivi,Bhairavi,Adi,Thyagaraja
Induka Ithanuvunu,Mukhari,Chapu,Thyagaraja
Inka Daya Rakunte,Narayanagowla,Adi,Thyagaraja
Inka Yochana Aite,Ghanta,Adi,Thyagaraja
Innalla Vale,Desya Todi,Chapu,Thyagaraja
Innallu Nanneli,Ghanta,Triputa,Thyagaraja
Innalu,Narayana Gowla,Chapu,Thyagaraja
Inta Bhagayamani Nirnayimpa,Punnagavarali,Chapu,Thyagaraja
Inta Soukhyamani,Kapi,Adi,Thyagaraja
Inta Tamasamaite,Saveri,Chapu,Thyagaraja
Intakanna Delpatarama,Saveri,Chapu,Thyagaraja
Intakanna Yanandamemi,Bilahari,Rupaka,Thyagaraja
Intanuchu Varnimpa,Gundakriya,Adi,Thyagaraja
Isa Pahi Mam,Kalyani,Rupaka,Thyagaraja
Itara Daivamula,Chayatarangini,Rupaka,Thyagaraja
Ivaraku Juchinati,Sankarabharanam,Adi,Thyagaraja
Jaya Jaya Sri Raghurama,Gowri,Adi,Thyagaraja
Je Je Sita Ram,Saveri,Chapu,Thyagaraja
Jnana Mosagarada,Shadvidhamargini,Rupaka,Thyagaraja
Kadalu Vadu Gade,Narayanagowla,Adi,Thyagaraja
Kadanuvariki,Todi,Adi,Thyagaraja
Kadatera Rada,Todi,Adi,Thyagaraja
Kalaharana Mela,Suddhasaveri,Rupaka,Thyagaraja
Kalala Nerchina,Dipaka,Adi,Thyagaraja
Kaligi Yunte Gade,Kiravani,Adi,Thyagaraja
Kalinarulaku,Kuntalavarali,Adi,Thyagaraja
Kaluguna Pada Niraja,Purna Lalita,Adi,Thyagaraja
Kamalapta Kula,Brindavanasaranga,Adi,Thyagaraja
Kanakana Ruchira,Varali,Adi,Thyagaraja
Kanna Talli,Saveri,Adi,Thyagaraja
Kannatandri Napai,Devamanohari,Adi,Thyagaraja
Kanta Judumi,Latangi,Adi,Thyagaraja
Kanugona Soukhyamu,Nayaki,Rupaka,Thyagaraja
Kanugontini,Bilahari,Adi,Thyagaraja
Karmame Balavantamaya,Saveri,Chapu,Thyagaraja
Karubaru Seyuvaru,Mukhari,Adi,Thyagaraja
Karuna Elagante,Varali,Adi,Thyagaraja
Karuna Judavamma,Todi,Adi,Thyagaraja
Karuna Judumayya,Saranga,Adi,Thyagaraja
Karuna Samudra,Devagandhari,Adi,Thyagaraja
Karunajaladhe,Nathanamakriya,Adi,Thyagaraja
Karunajaladhi,Kedara Gowla,Chapu,Thyagaraja
Karunarasakshaya,Ghanta,Jhampa,Thyagaraja
Karuvelpulu,Kalyani,Adi,Thyagaraja
Kasicchede,Gowlipantu,Adi,Thyagaraja
Kattu Jesinavu,Atana,Adi,Thyagaraja
Koluvai,Bhairavi,Adi,Thyagaraja
Koluvaiyunnade,Devagandhari,Adi,Thyagaraja
Koluvamare Gada,Todi,Adi,Thyagaraja
Koniyadedu Nayeda,Kokiladhwani,Adi,Thyagaraja
Kori Sevimparare,Kharaharapriya,Adi,Thyagaraja
Korivachchitinayya,Bilahari,Adi,Thyagaraja
Kotinadulu,Todi,Adi,Thyagaraja
Kripa Juchutaku,Chayatarangini,Adi,Thyagaraja
Kshinamai Tiruga,Mukhari,Adi,Thyagaraja
Kshirasagara,Devagandhari,Adi,Thyagaraja
Kulabirudu,Devamanohari,Rupaka,Thyagaraja
Kuvalaya Dala Nayana,Natakuranji,Adi,Thyagaraja
Lakshanamulu Gala,Suddhasaveri,Adi,Thyagaraja
Lali Lalayya,Kedara Gowla,Jhampa,Thyagaraja
Lali Lali Yani,Harikambhoji,Adi,Thyagaraja
Lali Yugave,Nilambari,Rupaka,Thyagaraja
Lalite Sri Pravriddhe,Bhairavi,Adi,Thyagaraja
Lavanya Rama,Rudrapriya,Rupaka,Thyagaraja
Lekana Ninnu,Asaveri,Adi,Thyagaraja
Lilaganu Juchu,Divyamani,Adi,Thyagaraja
Lokavana Chatura,Begada,Adi,Thyagaraja
Ma Janaki,Kambhoji,Adi,Thyagaraja
Madilona Yochana,Kolahalam,Adi,Thyagaraja
Mahita Pravriddha,Kambhoji,Chapu,Thyagaraja
Makelara Vicharamu,Ravichandrika,Adi,Thyagaraja
Mamava Raghurama,Saranga,Rupaka,Thyagaraja
Mamava Satatam,Jaganmohani,Adi,Thyagaraja
Manamu Leda,Amir Kalyani,Adi,Thyagaraja
Manasa Etulortune,Malaya Marutam,Rupaka,Thyagaraja
Manasa Mana Samarthya,Vardhani,Rupaka,Thyagaraja
Manasa Sri Ramachandruni,Isamanohari,Adi,Thyagaraja
Manasa Sri Ramuni Dayaleka,Mararanjani,Adi,Thyagaraja
Manasu Nilpa Sakti,Abhogi,Adi,Thyagaraja
Manasu Svadhinamaina,Sankarabharanam,Rupaka,Thyagaraja
Manasu Vishaya Nata,Natakuranji,Adi,Thyagaraja
Manasuloni Marmamu,Hindolam,Adi,Thyagaraja
Manavi Nalagincha,Nalinakanthi,Adi,Thyagaraja
Manavini Vinuma,Jaya Narayani,Adi,Thyagaraja
Mapala Velasi,Asaveri,Adi,Thyagaraja
Marachuvadana,Kedara,Adi,Thyagaraja
Marakata Manivarna,Varali,Adi,Thyagaraja
Maravakara,Devagandhari,Adi,Thyagaraja
Mari Mari Ninne,Kambhoji,Adi,Thyagaraja
Mariyada Gadayya,Bhairavam,Adi,Thyagaraja
Mariyada Gadura,Sankarabharanam,Adi,Thyagaraja
Marubalka Kunnavemira,Sri Ranjani,Adi,Thyagaraja
Marugelara,Jayantasri,Adi,Thyagaraja
Matadavemi,Nilambari,Adi,Thyagaraja
Mati Matiki Delpavalena,Mohanam,Chapu,Thyagaraja
Melu Melu,Sowrashtra,Adi,Thyagaraja
Meluko Dayanidhi,Sowrashtra,Rupaka,Thyagaraja
Melukovayya,Bhouli,Jhampa,Thyagaraja
Menu Joochi Mosa,Sarasangi,Adi,Thyagaraja
Meru Samana Dhira,Mayamalava Gowla,Adi,Thyagaraja
Mitri Bhagyame,Kharaharapriya,Adi,Thyagaraja
Mivalla Gunadosha,Kapi,Jhampa,Thyagaraja
Mohana Rama,Mohanam,Adi,Thyagaraja
Mokshamu Galada,Saramati,Adi,Thyagaraja
Mosaboku Vinaye,Gowlipantu,Adi,Thyagaraja
Muccata Brahmadulaku,Madhyamavati,Adi,Thyagaraja
Muddu Momu,Suryakantam,Adi,Thyagaraja
Mummurtulu,Atana,Adi,Thyagaraja
Mundu Venuka,Darbar,Adi,Thyagaraja
Munnu Ravana,Todi,Jhampa,Thyagaraja
Munuppe Teliyaka,Bangala,Adi,Thyagaraja
Muripemu Galige Gada,Mukhari,Adi,Thyagaraja
Nada Loludai,Kalyana Vasantam,Rupaka,Thyagaraja
Nada Sudharasambilanu,Arabhi,Rupaka,Thyagaraja
Nadachi Nadachi,Kharaharapriya,Adi,Thyagaraja
Nadadinamata,Janaranjani,Chapu,Thyagaraja
Nadatanumanisam,Chittaranjini,Adi,Thyagaraja
Nadopasanache,Begada,Adi,Thyagaraja
Nadupai Balikeru,Madhyamavati,Jhampa,Thyagaraja
Nagumomu Galavani,Madhyamavati,Adi,Thyagaraja
Nagumomu Ganaleni,Abheri,Adi,Thyagaraja
Najivadhara,Bilahari,Adi,Thyagaraja
Nalina Lochana,Madhyamavati,Chapu,Thyagaraja
Nama Kusumamulache,Sri Ragam,Adi,Thyagaraja
Nammakane Mosapodu,Asaveri,Rupaka,Thyagaraja
Nammi Vachchina,Kalyani,Rupaka,Thyagaraja
Nammina Varini Marachedi,Bhairavi,Adi,Thyagaraja
Namoralakimpavemi,Devagandhari,Rupaka,Thyagaraja
Namoralanu Vini,Arabhi,Adi,Thyagaraja
Nannu Kanna Talli,Kesari,Adi,Thyagaraja
Nannu Vidachi,Ritigowla,Chapu,Thyagaraja
Nannubrova,Abhogi,Adi,Thyagaraja
Nanu brovakanu,Sankarabharanam,Triputa,Thyagaraja
Nanu Palimpa,Mohanam,Adi,Thyagaraja
Napali Sri Rama,Sankarabharanam,Adi,Thyagaraja
Narada Ganalola,Atana,Rupaka,Thyagaraja
Naradaguruswami,Darbar,Adi,Thyagaraja
Narayana Hari,Yamuna Kalyani,Adi,Thyagaraja
Narsimha Nannu,Bilahari,Triputa,Thyagaraja
Natha Brovave,Bhairavi,Adi,Thyagaraja
Nati Mata Marachitivo,Devakriya,Adi,Thyagaraja
Nayeda Vanchana Seyakura,Nabhomani,Adi,Thyagaraja
Ne Morabettite,Rupavati,Triputa,Thyagaraja
Nee Daya Galgute,Ritigowla,Adi,Thyagaraja
Nenarunchera Napaini,Simhavahini,Adi,Thyagaraja
Nenarunchinanu,Malavi,Adi,Thyagaraja
Nenendu Vetukudura,Harikambhoji,Adi,Thyagaraja
Nepogadakunte,Desya Todi,Jhampa,Thyagaraja
Nerama Rama Rama,Sowrashtra,Adi,Thyagaraja
Ni Chittamu Na Bhagyamu,Vijayavasantam,Adi,Thyagaraja
Ni Chittamu Nischalamu,Dhanyasi,Chapu,Thyagaraja
Ni Dayache Rama,Yadukulakambhoji,Adi,Thyagaraja
Ni Muddu Momu,Kamala Manohari,Adi,Thyagaraja
Ni Namarupamulaku,Sowrashtra,Adi,Thyagaraja
Ni Vada Negana,Saranga,Jhampa,Thyagaraja
Ni Vera Kula Dhanamu,Begada,Chapu,Thyagaraja
Nibhajana Gana,Nayaki,Adi,Thyagaraja
Nibhakti Bhagya,Jayamanohari,Rupaka,Thyagaraja
Nidasanu Dasu,Amir Kalyani,Adi,Thyagaraja
Nidaya Rada,Vasanta Bhairavi,Rupaka,Thyagaraja
Nidayache Rama Nityanandu,Yadukulakambhoji,Adi,Thyagaraja
Nidayaya Ravalegaka,Todi,Adi,Thyagaraja
Nidhi Chala Sukhama,Kalyani,Chapu,Thyagaraja
Nijamarmamulanu,Umabharanam,Adi,Thyagaraja
Nijamuga Nimahimalu,Sahana,Adi,Thyagaraja
Nike Daya Raka,Nilambari,Triputa,Thyagaraja
Nike Teliyakapote,Anandabhairavi,Adi,Thyagaraja
Nikevari Bodhana,Suddhasaveri,Adi,Thyagaraja
Niku Tanaku,Begada,Triputa,Thyagaraja
Ninnada Nela,Kannada,Adi,Thyagaraja
Ninnanavalasina,Kalyani,Chapu,Thyagaraja
Ninne Bhajana,Natai,Adi,Thyagaraja
Ninne Nera Namminanu,Arabhi,Chapu,Thyagaraja
Ninne Nera Namminanura,Pantuvarali,Rupaka,Thyagaraja
Ninnubasi,Balahamsa,Adi,Thyagaraja
Ninnuvina Namadi Endu,Navarasa Kannada,Rupaka,Thyagaraja
Ninnuvina Sukhamugana,Todi,Rupaka,Thyagaraja
Nipada Pankajamule,Begada,Adi,Thyagaraja
Nityarupa Evari,Kapi,Rupaka,Thyagaraja
Nivanti Daivamu,Bhairavi,Adi,Thyagaraja
Nivanti Daivamu,Todi,Adi,Thyagaraja
Nive Nanneda Jesite,Sowrashtra,Chapu,Thyagaraja
Nivegani Nannu,Bilahari,Chapu,Thyagaraja
Nivu Brovavale,Saveri,Adi,Thyagaraja
Noaremi Sri Rama,Varali,Adi,Thyagaraja
Nrupalavala,Nadavarangini,Adi,Thyagaraja
Oh Jaganatha,Kedara Gowla,Adi,Thyagaraja
Oh Rajivaksha,Arabhi,Chapu,Thyagaraja
Oh Rama Oh Rama Omkaradhama,Arabhi,Adi,Thyagaraja
Oh Rama Rama,Naga Gandhari,Chapu,Thyagaraja
Oh Ramaramana,Kedara,Adi,Thyagaraja
Oh Ranga Sayi,Kambhoji,Adi,Thyagaraja
Okamata Yokabanamu,Harikambhoji,Rupaka,Thyagaraja
Okapari Judaga Rada,Kalavati,Adi,Thyagaraja
Orajupu,Kannadagowla,Adi,Thyagaraja
Orulanaduko,Suddhasaveri,Adi,Thyagaraja
Padavi Ni Sadbhaktiyu,Salaga Bhairavi,Adi,Thyagaraja
Pahi Kalyana Sundara,Punnagavarali,Chapu,Thyagaraja
Pahi Mam Hare,Sowrashtra,Rupaka,Thyagaraja
Pahi Mam Sri Ramachandra,Kapi,Jhampa,Thyagaraja
Pahi Paramatma,Varali,Adi,Thyagaraja
Pahi Rama Duta,Vasanta Varali,Rupaka,Thyagaraja
Pahi Rama Rama Yanuchu,Kharaharapriya,Thisra Laghu,Thyagaraja
Pahi Rama Ramana,Varali,Adi,Thyagaraja
Pahi Ramachandra Raghava,Yadukulakambhoji,Thisra Laghu,Thyagaraja
Pakkala Nilabadi,Kharaharapriya,Triputa,Thyagaraja
Palintuvo Palimpavo,Kantamani,Adi,Thyagaraja
Palukavemi Na Daivama,Purnachandrika,Adi,Thyagaraja
Palukavemi Patitapavana,Arabhi,Thisra Laghu,Thyagaraja
Paluku Kanda Chakkeranu,Navarasakannada,Adi,Thyagaraja
Paluku Kandachakkeranu,Navarasa Kannada,Adi,Thyagaraja
Para Loka Bhayamu,Mandari,Adi,Thyagaraja
Paraku Nikelara Rama,Kiranavali,Adi,Thyagaraja
Paraloka Sadhaname,Purvikalyani,Adi,Thyagaraja
Paramatmudu,Vagadhiswari,Adi,Thyagaraja
Parasakti Manuparada,Saveri,Adi,Thyagaraja
Paripalaya Paripalaya,Ritigowla,Adi,Thyagaraja
Paripurna Kama,Purvikalyani,Rupaka,Thyagaraja
Paritapamu Gani,Manohari,Rupaka,Thyagaraja
Pariyachakama Mata,Vanaspati,Rupaka,Thyagaraja
Paruku Jesina,Jujahuli,Adi,Thyagaraja
Patiki Harati,Surati,Adi,Thyagaraja
Pattividuva Radu,Manjari,Adi,Thyagaraja
Prananata Birana,Sulini,Adi,Thyagaraja
Prarabdhamittundaga,Swaravali,Jhampa,Thyagaraja
Proddupoyyenu,Todi,Chapu,Thyagaraja
Pula Panpu Mida,Ahiri,Thisra Laghu,Thyagaraja
Raga Ratna Malika,Ritigowla,Rupaka,Thyagaraja
Ragasudharasa,Andolika,Adi,Thyagaraja
Raghunandana Rajamohana,Suddha Desi,Adi,Thyagaraja
Raghunayaka,Hamsadhwani,Adi,Thyagaraja
Raghuvara Nannu,Pantuvarali,Adi,Thyagaraja
Raghuvira Randhira,Kharaharapriya,Rupaka,Thyagaraja
Rahi Kalyanarama,Kapi,Adi,Thyagaraja
Raju Vedale,Desya Todi,Rupaka,Thyagaraja
Raka Sasi Vadana,Takka,Adi,Thyagaraja
Raksha Bettare,Bhairavi,Adi,Thyagaraja
Rama Bana Trana,Saveri,Adi,Thyagaraja
Rama Daivama,Surati,Rupaka,Thyagaraja
Rama Eva Daivatam,Balahamsa,Rupaka,Thyagaraja
Rama Katha Sudha,Madhyamavati,Adi,Thyagaraja
Rama Kodanda Rama,Bhairavi,Adi,Thyagaraja
Rama Kodanda Rama Pahi,Kharaharapriya,Chapu,Thyagaraja
Rama Lobhamela,Darbar,Adi,Thyagaraja
Rama Namam Bhajare,Madhyamavati,Adi,Thyagaraja
Rama Ni Samana,Kharaharapriya,Rupaka,Thyagaraja
Rama Ni Vadu Konduvo,Kalyani,Adi,Thyagaraja
Rama Ninne Namminanu,Huseni,Adi,Thyagaraja
Rama Ninnu Vina,Sankarabharanam,Rupaka,Thyagaraja
Rama Ninu Namminanu,Mohanam,Adi,Thyagaraja
Rama Nipai Tanaku,Kedaram,Adi,Thyagaraja
Rama Nivegani,Narayani,Adi,Thyagaraja
Rama Niyeda Prema,Kharaharapriya,Adi,Thyagaraja
Rama Pahi Meghasyama,Kapi,Chapu,Thyagaraja
Rama Raghukula Jalanidhi,Kapi,Rupaka,Thyagaraja
Rama Rama Nivaramugama,Anandabhairavi,Adi,Thyagaraja
Rama Rama Rama,Mohanam,Chapu,Thyagaraja
Rama Rama Rama,Sahana,Chapu,Thyagaraja
Rama Rama Rama Napai,Kalyani,Chapu,Thyagaraja
Rama Rama Rama Sita,Huseni,Rupaka,Thyagaraja
Rama Rama Ramachandra,Ghanta,Jhampa,Thyagaraja
Rama Ramakrishna,Gowlipantu,Adi,Thyagaraja
Rama Ramana,Sankarabharanam,Adi,Thyagaraja
Rama Ramana,Vasanta Bhairavi,Adi,Thyagaraja
Rama Samayamu Brovara,Madhyamavati,Adi,Thyagaraja
Rama Sitarama,Balahamsa,Adi,Thyagaraja
Rama Sitarama,Sankarabharanam,Adi,Thyagaraja
Rama Sri Rama,Sankarabharanam,Adi,Thyagaraja
Ramabhakti Samrajyame,Suddha Bangala,Adi,Thyagaraja
Ramabhi Rama,Dhanyasi,Adi,Thyagaraja
Ramabhirama,Saveri,Jhampa,Thyagaraja
Ramabhirama Ramaniya Nama,Darbar,Chapu,Thyagaraja
Ramachandra Nidaya,Surati,Adi,Thyagaraja
Ramanannu Brovara,Harikambhoji,Rupaka,Thyagaraja
Raminchuvarevaru,Suposhini,Rupaka,Thyagaraja
Ranidi Radu,Manirangu,Adi,Thyagaraja
Rara Mayintidaka,Asaveri,Adi,Thyagaraja
Rara Nannelukora,Sowrashtra,Chapu,Thyagaraja
Rara Raghuvira,Atana,Adi,Thyagaraja
Rara Sita,Hindola Vasantam,Rupaka,Thyagaraja
Rukalu Padivelu,Desya Todi,Adi,Thyagaraja
Sadhinchene,Arabhi,Adi,Thyagaraja
Saketa Niketana,Kannada,Rupaka,Thyagaraja
Sakshi Ledanuchu,Bangala,Adi,Thyagaraja
Samaja Varagamana,Hindolam,Adi,Thyagaraja
Samayamu Delisi,Asaveri,Chapu,Thyagaraja
Samayamu Emarake,Kalgada,Adi,Thyagaraja
Sambho Mahadeva,Pantuvarali,Rupaka,Thyagaraja
Samiki Sari,Begada,Rupaka,Thyagaraja
Samsarulaite,Saveri,Adi,Thyagaraja
Samukhana Nilva,Kokilavarali,Adi,Thyagaraja
Sanatana Paramapavana,Phalamanjari,Adi,Thyagaraja
Sandehamunu,Ramapriya,Adi,Thyagaraja
Sangita Gnanamu,Dhanyasi,Adi,Thyagaraja
Sangita Sastra Gnanamu,Salaga Bhairavi,Adi,Thyagaraja
Santamu Leka,Sama,Adi,Thyagaraja
Saramegani,Pantuvarali,Chapu,Thyagaraja
Sarasa Sama Dana,Kapinarayani,Adi,Thyagaraja
Sarasara Samaraika,Kuntalavarali,Adi,Thyagaraja
Sarasiru Nayana,Bilahari,Chapu,Thyagaraja
Sarasiruhanana,Mukhari,Adi,Thyagaraja
Sari Vedalina,Asaveri,Adi,Thyagaraja
Sarijesi Veduka,Tivravahini,Adi,Thyagaraja
Sarivarilona,Bhinna Shadja,Adi,Thyagaraja
Sariyevvare Sri Janaki,Sri Ranjani,Adi,Thyagaraja
Sarvabhauma,Ragapanjaram,Adi,Thyagaraja
Sarvaloka Dayanidhe,Huseni,Thisra Laghu,Thyagaraja
Sarvantaryami,Bhairavi,Adi,Thyagaraja
Sasivadana Bhakta,Chandrajyoti,Adi,Thyagaraja
Sattaleni Dinamu,Naganandini,Adi,Thyagaraja
Siggumaali Navaledara,Kedara Gowla,Adi,Thyagaraja
Sita Manohara,Rama Manohari,Adi,Thyagaraja
Sita Nayaka,Ritigowla,Chapu,Thyagaraja
Sitamma Mayamma,Lalita,Rupaka,Thyagaraja
Sitapati,Khamas,Adi,Thyagaraja
Sitavara Sangita,Devagandhari,Adi,Thyagaraja
Siva Siva Siva Yanarada,Pantuvarali,Adi,Thyagaraja
Sive Pahimam Ambike,Kalyani,Adi,Thyagaraja
Smarane Sukhamu,Janaranjani,Adi,Thyagaraja
Sobhillu Saptasvara,Jaganmohini,Rupaka,Thyagaraja
Sogasu Juda Tarama,Kannadagowla,Adi,Thyagaraja
Sogasuga Mridanga,Sri Ranjani,Rupaka,Thyagaraja
Sri Ganapatini,Sowrashtra,Adi,Thyagaraja
Sri Janakatanaye,Kalakanti,Adi,Thyagaraja
Sri Janaki Manohari,Isamanohari,Adi,Thyagaraja
Sri Kanta Niyada,Bhavapriya,Adi,Thyagaraja
Sri Manini Manohara,Purnashadjam,Adi,Thyagaraja
Sri Narada Muni,Bhairavi,Adi,Thyagaraja
Sri Narada Nada,Kannada,Rupaka,Thyagaraja
Sri Raghuvara,Bhairavi,Adi,Thyagaraja
Sri Raghuvara,Bhairavi,Adi,Thyagaraja
Sri Rama Dasa Dasoham,Dhanyasi,Chapu,Thyagaraja
Sri Rama Jaya Rama,Varali,Chapu,Thyagaraja
Sri Rama Jayarama,Madhyamavati,Adi,Thyagaraja
Sri Rama Padama,Amritavahini,Adi,Thyagaraja
Sri Rama Raghurama,Yadukulakambhoji,Jhampa,Thyagaraja
Sri Rama Rama,Gopikavasantam,Adi,Thyagaraja
Sri Rama Rama,Purnachandrika,Jhampa,Thyagaraja
Sri Rama Rama,Saveri,Adi,Thyagaraja
Sri Rama Ramasritulamu Gama,Saveri,Chapu,Thyagaraja
Sri Rama Sri Rama Jayarama,Varali,Adi,Thyagaraja
Sri Rama Sri Rama Sri Manoharama,Sahana,Adi,Thyagaraja
Sri Ramachandra,Saveri,Adi,Thyagaraja
Sri Tulasamma Mayinta,Devagandhari,Adi,Thyagaraja
Sripapriya,Atana,Adi,Thyagaraja
Sripare Nipada,Nagaswaravali,Adi,Thyagaraja
Sudha Madhurya,Sindhuramakriya,Adi,Thyagaraja
Sugunamule,Chakravakam,Rupaka,Thyagaraja
Sukhi Yevaro,Kannada,Adi,Thyagaraja
Sundara Dasaratha,Kapi,Adi,Thyagaraja
Sundareswaruni,Sankarabharanam,Adi,Thyagaraja
Sundari Nannindarilo,Begada,Rupaka,Thyagaraja
Sundari Ni Divya,Kalyani,Adi,Thyagaraja
Sundari Ninu Varnimpa,Arabhi,Chapu,Thyagaraja
Swararagasudha,Sankarabharanam,Adi,Thyagaraja
Syama Sundara,Dhanyasi,Rupaka,Thyagaraja
Talachi Nantane,Mukhari,Adi,Thyagaraja
Tallidandrulu,Balahamsa,Adi,Thyagaraja
Tanalone Dhyaninchi,Devagandhari,Adi,Thyagaraja
Tanamidane,Bhushavali,Adi,Thyagaraja
Tanavari Tanamu,Begada,Adi,Thyagaraja
Tanayuni Brova,Bhairavi,Adi,Thyagaraja
Tappagane Vachchuna,Suddha Bangala,Rupaka,Thyagaraja
Tappi Bratiki,Todi,Rupaka,Thyagaraja
Tatva Meruga,Garudadhwani,Rupaka,Thyagaraja
Tava Dasoham,Punnagavarali,Adi,Thyagaraja
Telisi Ramachintanato,Purnachandrika,Adi,Thyagaraja
Teliyaleru,Dhenuka,Adi,Thyagaraja
Tera Tiyaga Rada,Gowlipantu,Adi,Thyagaraja
Tiruna Naloni Dugdha,Saveri,Jhampa,Thyagaraja
Toli Janmamu,Bilahari,Jhampa,Thyagaraja
Toli Nenu Jesina,Kokiladhwani,Adi,Thyagaraja
Toline Jesina Pujaphalamu,Suddha Bangala,Adi,Thyagaraja
Tulasi Bilwa,Kedara Gowla,Adi,Thyagaraja
Tulasi Dalamulache,Mayamalava Gowla,Rupaka,Thyagaraja
Tulasi Jagat Janani,Saveri,Rupaka,Thyagaraja
Undedi Ramudu Okadu,Harikambhoji,Rupaka,Thyagaraja
Upacharamu Jesevaru,Bhairavi,Rupaka,Thyagaraja
Upacharamulanu Chekonavayya,Bhairavi,Adi,Thyagaraja
Urake Galguna,Sahana,Chapu,Thyagaraja
Uyyala,Nilambari,Jhampa,Thyagaraja
Vachama Gocharame,Kaikavasi,Adi,Thyagaraja
Vachchunu Hari,Kalyani,Adi,Thyagaraja
Vaddanundunade,Varali,Chapu,Thyagaraja
Vadera Daivamu,Pantuvarali,Adi,Thyagaraja
Vallagadanaka,Sankarabharanam,Rupaka,Thyagaraja
Vandanamu Raghunandana,Sahana,Adi,Thyagaraja
Vara Narada,Vijaya Sri,Adi,Thyagaraja
Varadaraja,Swarabhushani,Rupaka,Thyagaraja
Varalandukommani,Ghurjari,Adi,Thyagaraja
Vararagalaya,Chenchukambhoji,Adi,Thyagaraja
Varasikhi Vahana,Supradipa,Adi,Thyagaraja
Varijanayana,Kedara Gowla,Adi,Thyagaraja
Venkatesa Ninu,Madhyamavati,Adi,Thyagaraja
Verevvare,Surati,Adi,Thyagaraja
Vidajaladura,Janaranjani,Adi,Thyagaraja
Vidamu Seyave,Kharaharapriya,Adi,Thyagaraja
Vidhi Sakradulaku,Yamuna Kalyani,Rupaka,Thyagaraja
Vidulaku,Mayamalava Gowla,Adi,Thyagaraja
Vinanasakoni,Pratapavarali,Adi,Thyagaraja
Vinarada,Devagandhari,Adi,Thyagaraja
Vinatasuta,Huseni,Adi,Thyagaraja
Vinatasutavahana,Jayantasena,Adi,Thyagaraja
Vinave Omanasa,Vivardhani,Rupaka,Thyagaraja
Vinayakuni Valenu,Madhyamavati,Adi,Thyagaraja
Vinayamunanu,Sowrashtra,Chapu,Thyagaraja
Viraja Turaga,Balahamsa,Adi,Thyagaraja
Yagnadulu,Jayamanohari,Adi,Thyagaraja
Yemandune,Srimani,Adi,Thyagaraja
Yochana Kamala Lochana,Darbar,Adi,Thyagaraja
Yuktamugadu,Sri Ragam,Adi,Thyagaraja