(சாகித்ய அகாடமி சொற்பொழிவு கோவை)
(பொதிகை தொலைக்காட்சியில்)
(ஓலைச்சுவடி எழுத்து பயிற்சி பெற்றமைக்கு சான்றிதழ் -மோடி எழுத்து,கிரந்தம்,தெலுங்கு-
சரஸ்வதி மஹால் நூலகம்)
(ஒலைச்சுவடி எழுத்து வகுப்பு -சரஸ்வதி மஹால்)
(மோடி ஆவண ஆய்வில்)
பள்ளிப் படிப்பை முடித்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் இசையில் இ்ளங்கலை மற்றும் முதுகலைப் பட்டத்தினை முதல் வகுப்பில் நிறைவு செய்தார். “மல்லாரி” என்னும் இசை வடிவத்தை ஆராய்ந்து ஆய்வியல் நிறைஞர் பட்டத்தில் தமிழ்ப் பல்கலைக்கழக இசைத்துறையில் முதலாவது மாணவனாகத் தேர்ச்சி பெற்றார். “திருவாரூர் மாவட்டம் ஒரு இசை மையம்” எனும் தலைப்பில் பல்வேறு செய்திகளை ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றார். இசையில் ஆசிரியர் பயிற்சி, பட்டயம், சான்றிதழ், இந்திய இசையில் முதுநிலை ஆகிய தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளார். தேசிய அளவிலான பேராசிரியர் தகுதி தேர்வில் (UGC-NET) முதல் நிலையில் தேர்ச்சி அடைந்துள்ளார்.
(திருவையாறு இசைக்கல்லூரியில் வருகைதரும் பேராசிரியராக)
(மூத்த இசை ஆய்வாளர் பி.எம்.சுந்தரம் அவர்களுடன் அமெரிக்க இசை மாணவர்களுக்கு செயல்முறை நிகழ்ச்சி வழங்கிய போது)
(மதுரை ஸ்ரீ சத்குரு சங்கீத வித்யவித்யாலயா வில் இசை ஆய்வுரை வழங்கிய நிகழ்வு)
(தமிழ் பல்கலைக்கழகத்தில் இசை ஆய்வுரை வழங்கிய நிகழ்வுகள்)
(ஈரோட்டில் அரசு இசைப்பள்ளி சார்பாக நடைபெற்ற இசை விழாவில் இசை செயல் முறை நிகழ்ச்சி வழங்கிய தருணம்)
(திருவையாறு தமிழ் இசைச்சங்கம் விருது வழங்கி விழா)
(இளங்கோ -கம்பன் கழகம் பாராட்டியது)
(முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வில் நெறியாளருடன்)
"திருவாரூர் மாவட்ட திருத்தல இசை வடிவங்கள்" எனும் ஆய்வு நூலை எழுதி உள்ளார்.மேலும் சில ஆய்வு நூல்களை தற்போது எழுதி வருகிறார்.
திருவையாறில் அமைந்துள்ள தமிழிசை மன்றம் இவரது இசைப் பணியினை பாராட்டி இசை விருதினை வழங்கி கெளரவித்து.
கம்பன் கழகம் இவரது ஆராய்ச்சி பணியினை பாராட்டி விருது ஒன்றை வழங்கியது.
(சரஸ்வதி மஹால் நூலக கருத்தரங்கில்)
பல்கலைக்கழகங்கள் , கல்லூரிகள், இசை விழாக்கள், சபாக்கள்தொலைக்காட்சி மற்றும் வானொலி போன்றவற்றில் இசைச் சொற்பொழிவு , செயல்முறை வி்ளக்க நிகழ்ச்சி, கருத்தரங்க ஆய்வுச்சொற்பொழிவுகளை நிகழ்த்தி வருகிறார்.
கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களிலும், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் இசை நிகழ்ச்சி வழங்கியுள்ளார். இவர் இதுவரை இசைத் தொடர்பான 50க்கும் மேற்பட்ட தேசிய, பன்னாட்டுக் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு, தனது ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியுள்ளார். இசை தொடர்பான அரிய நூல்கள் பற்றியும் ஆலயங்களில் இசை மற்றும் நாட்டியம் தொடர்பான செய்திகள் பற்றியும் தற்போது ஆராய்ந்து வருகிறார்.
(ஹங்கேரி நாட்டு ஆய்வாளர் சஸ்கியா கர்சன்பூம் உடன்)
(தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வருகை தரும் பேராசிரியராக)